அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பைக் கருதியே அருச்சுனாவின் காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒட்டவில்லை – மானிப்பாய் தவிசாளர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டச் சென்றால் “வெடி விழும்” என அவர் மிரட்டியதால், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பைக் கருதி நோட்டீஸ் ஒட்டவில்லை என மானிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் க.ஜெசீதன் தெரிவித்த கருத்தால் சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்த விவகாரம் சூடுபிடித்தது. பெரியவிளான் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவிற்குச் சொந்தமான காணி பற்றைகள் வளர்ந்து காடாகக் காணப்படுவதால், அங்கிருந்து பாம்புகள் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கடந்த சபை அமர்வில் உறுப்பினர் எட்வேட் மரியவாசினி சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படும் எனத் தவிசாளர் உறுதியளித்திருந்த போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என உறுப்பினர் அச்சுதபாயன் கேள்வி எழுப்பினார்.

“பெண்களை அவதூறாகப் பேசும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் காணிக்கு ஏன் இன்னும் நோட்டீஸ் ஒட்டவில்லை? அந்த நோட்டீஸை எங்களிடம் தந்திருந்தால் நாங்களே ஒட்டியிருப்போம். ஏன் இந்தத் தாமதம்?” என உறுப்பினர் அச்சுதபாயன் கேள்வி எழுப்பினார்.

“நோட்டீஸ் ஒட்டுவது என்பது ஒரு அடையாளம் மட்டுமே. ஆனால், நாம் இது குறித்துச் சபையில் பேசிய விடயம் ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே வலுவாகச் சென்றடைந்துள்ளது. அந்தப் பிரதிநிதி தனது சமூக வலைத்தளத்தில், ‘நோட்டீஸ் ஒட்ட வருபவர்களுக்கு வெடி விழும்’ என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அரச உத்தியோகத்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் உயிரைப் பணயம் வைத்து எதனையும் செய்ய முடியாது.” என தவிசாளர் க.ஜெசீதன் விளக்கமளித்துள்ளார்.

பெரியவிளான் வட்டார உறுப்பினர் எட்வேட் மரியவாசினி பேசுகையில்,

பாராளுமன்ற உறுப்பினருக்குச் சாதகமாக தவிசாளர் செயல்படுகிறாரா எனக் கேள்வி எழுப்பியதுடன், சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உப தவிசாளர் சுதாகர் இந்த விவகாரத்தில் தமக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததையும் கடுமையாகச் சாடினார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் குறித்த காணியை உடனடியாகச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியபோது, ஏனைய உறுப்பினர்களும் தவிசாளரின் மெத்தனப் போக்கிற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

TFFLHSNFUIL4BRUBNYZNXBWGVI

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: இரண்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பிராங்க் ஸ்ட்ரோனாக் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 19, 2026

பல தசாப்தங்களுக்கு முன்னர் பல பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பில்லியனர் தொழிலதிபரான பிராங்க் ஸ்ட்ரோனாக்

chemma7

காணாமல் போனோர் அலுவலகம் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும்- ஆணையாளர்

June 19, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்