கல்கரியில் காணாமல் போன 11 வயது சிறுவனைத் தேடும் பணி ‘நோஸ் ஹில் பூங்கா’ பகுதிக்கு விரிவாக்கம்

காணாமல் போன 11 வயதான பார்க்கர் வெல்ஸ் (Parker Wells) என்ற சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நோஸ் ஹில் பூங்காவின் (Nose Hill Park) மேற்குப் பகுதி வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதை நுழைவாயில் ஆகியன இந்த வார இறுதியில் மூடப்பட்டுள்ளன. ஷாகனப்பி ட்ரெயில் (Shaganappi Trail N.W.) பகுதிக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதை நுழைவாயில் வார இறுதி முழுவதும் மூடப்பட்டிருக்கும் எனப் பொலிஸார் சனிக்கிழமை காலை வெளியிட்ட […]
எட்டோபிகோக் துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்; சந்தேகநபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

வெள்ளிக்கிழமை அதிகாலை எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிராம்ப்டனைச் சேர்ந்த நபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர். ஹம்பர்வுட் (Humberwood) மற்றும் ரெக்ஸ்டேல் (Rexdale) வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் காலை 7 மணிக்குச் சற்றுப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேகநபரும் […]
பொதுவான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை- ஆறு தமிழ் பேசும் கட்சிகள் அனுமதி கோரிக்கை!

தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட இம்மாதத் தொடக்கத்தில் தீர்மானித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, தமிழ் பேசும் சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான விவகாரங்களில் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஒவ்வொரு கட்சியும் சுயாதீனமாக இயங்கும் என்றும், தத்தமது அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் உறுதியளிக்கப்பட்ட அதேவேளையில், ஆக்கப்பூர்வமான அரசியல் ஈடுபாட்டின் மூலம் […]
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல்: ஒன்பது பேர் கைது!

கிளிநொச்சி, அக்கரயான்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாகக் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. அக்கரயான்குளம், முக்கன்பன் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போதே இந்த மோதல் சம்பவித்துள்ளது. உள்ளூர் வனப்பகுதியை சட்டவிரோதமாக துப்புரவு செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. […]
தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சென்னையில் கொண்டாட்டம்!

சென்னை: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டக்காரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவுத் தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் […]
முக்கிய மைல்கல்லை எட்டியது தமிழ்ச்சமூக மையம்

ரொறன்டோ ஒன்டாறியோ – வட கிழக்கு ஸ்காபரோவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் மூன்று நிலை அரசுகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்று ஒன்றுகூடி விடுத்த அறிவித்தலின் ஊடாக தமிழ்ச் சமூக மையம் தனது கட்டுமானத் திட்டமிடலில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஸ்காபரோ சமூக மன்றத்தால் தமிழ்ச்சமூக மையத்தின் உத்தியோகபூர்வ திட்ட வரைவு மற்றும் பயன்பாட்டு மாற்றத்திற்கான உபவிதி மாற்றங்கள் ஆகியவற்றுக்கு […]
“இனி அரசியல் பேச மாட்டேன் .. தலையிட மாட்டேன்” – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

திண்டிவனம்: 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள தைலப்புரம் தோட்டத்துக்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ராமதாஸ் பேசினார். அப்போது, அரசியலில் இருந்து விலகுவதாக […]
நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை – நிர்மல்குமார்!

மதுரை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; \”நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு குறித்து திமுக […]
“மாணவர்கள் பங்கெடுக்காத எந்த போராட்டமும் வெற்றி அடையாது” – இயக்குநர் வெற்றிமாறன்!

புதுடெல்லி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி […]
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு […]