எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஓரளவுக்கு மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது அதன் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை திறைசேரியும் (Treasury) பொற்றோலியக் கூட்டுத்தாபனமும் பொறுப்பேற்றுக்கொள்ளும் என நேற்று முன்தினம் (16.04.2026) களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை […]
கனடா வாகன விபத்தில் கொல்லப்பட்ட தனது குடும்பத்துக்காக நியாயம் கேட்டுப் போராடிய தமிழருக்கு நீதி மறுப்பு!

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது கனடாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளமை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய […]
கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் குறித்து எந்தவிதத் தகவல்களும் கிடைக்காத நிலையில், அவனது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சித்திரை புத்தாண்டுக்காகப் புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுவனின் விபரங்கள்: பெயர்: பஸ்மின் நவீத் வயது: […]
280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாடு வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் உரிமைகோரல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வளவு அதிக விலைக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது என்ற தகவலின் […]
மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. ஒரிலியா நகரில் ஏரிகள் பெருக்கெடுத்துள்ளதால், நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 60 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இதனால் லேக் சிம்கோ (Lake Simcoe) மற்றும் லேக் கவுச்சிச்சிங் (Lake Couchiching) ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் சராசரியை விட உயர்ந்துள்ளதுடன், கரையோரப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு […]
எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இது மிகவும் காலதாமதமானது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ள முக்கிய விடயங்கள்: நாடாளுமன்றத்தின் நேரம் வீணடிப்பு: குமார ஜெயக்கொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்தது. எனினும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனைத்து […]
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர் அழைக்கப்பட்டு யாழ் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் அரசியலமைப்பு செயன்முறைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒன்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வடிவிலான தீர்வையும் நிராகரித்தும், திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தீர்வு திட்ட வரைபை தயாரிப்பது என்றும் இணங்கப்பட்டது. ஸ்ரீலங்காவில் 77 ஆண்டுகளாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் […]
வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் தேசிய திட்டமிடல், அரச நிதி முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதியளிப்பு, […]
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார். […]
பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted) கத்திக்குத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு, 199 ஆவது வீதி மற்றும் 64 ஆவது அவென்யூவிற்கு அருகில் “ஒரு மோதல்” நடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு 46 வயதுடைய நபர் ஒருவர் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரது […]