“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கான உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன.

“ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரது தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும், மரண தண்டனை தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், அவரை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி, அனோஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து மனிதாபிமான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்

pa

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

September 20, 2026

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட

WhatsApp Image 2026-09-20 at 15.25.28

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்

mo

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

September 20, 2026

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை