எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலைகள்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்கள் அவசரமாக ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், அது பொதுமக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், தொழிற்துறை நடவடிக்கைகள், மின்சார உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தற்போதைய நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவது தொடர்பில் ஐஎம்எப் உடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தித் துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணத் திட்டத்தை அறிவித்திருந்தது. அதன் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டது.

எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை
இதற்காக மூன்று மாத காலப்பகுதியில் திறைசேரிக்கு சுமார் 60 பில்லியன் ரூபா செலவாகியிருந்தது. இந்த நிவாரணத் திட்டம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.

இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐஎம்எப் முக்கிய நிபந்தனையொன்றை விதித்துள்ளது.

அதன்படி, எரிபொருள் விலைகள் உண்மையான செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

 

எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளும் உயர்ந்துள்ளதால், தற்போதைய விலை மட்டத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், டீசல் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்

pa

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

September 20, 2026

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட

WhatsApp Image 2026-09-20 at 15.25.28

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்

mo

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

September 20, 2026

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை