நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம்

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியம் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று மலையக மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராமன் செந்தூரன் தலைமையில் கொட்டகலை, கெமர்ஷல் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது. பல ஆண்டுகளாக மலையக மக்கள் முன்வைத்து வரும் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரிவான கருத்துக்களை இக்கூட்டத்தில் பரிமாறிக் கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ராமன் செந்தூரன், பேராதனை போன்ற […]

அமெரிக்க விமானியைபிடிப்பது ஈரானுக்குக் கிடைக்கும் ‘மிகப்பெரிய வெற்றி’: அமெரிக்க நிபுணர்

பிபிசி ரேடியோ 4-இன் ‘டுடே’ (Today) நிகழ்ச்சியில் பேசிய சாத்தம் ஹவுஸ் (Chatham House) அமைப்பின் அமெரிக்க மற்றும் வட அமெரிக்கத் திட்டப் பணிப்பாளர் லாரல் ராப், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து காணாமல் போன விமானியை மீட்பது ஒரு “முக்கியமான பணி” (Critical mission) என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானியை உயிருடன் பிடிப்பது ஈரானுக்குக் கிடைக்கும் ஒரு “மிகப்பெரிய வெற்றி” (Huge prize) என்றும், இது அவர்களுக்கு மிகவும் வலிமையான ஒரு “பேரம்பேசும் கருவியாக” (Bargaining chip) […]

கனமழையால் ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் 50 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 89 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நாட்டின் பல பகுதிகளை தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 18 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தலைநகர் காபூல், கந்தஹார் மற்றும் ஹெராத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் அடங்குகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவர் […]

தெஹ்ரான் – பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரானின் மீது அமெரிக்காவின் F-15 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஒரு பெரிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் மத்திய ஈரானை குறிவைத்து 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியதாக […]

கனடாவின் அடமான வட்டி விகிதங்களை மத்திய கிழக்கு போர் எவ்வாறு பாதிக்கிறது?

கடந்த மாதம், மூன்று மற்றும் ஐந்து ஆண்டு நிலையான அடமானங்கள் வெறும் மூன்று வாரங்களில் 0.5 சதவீதம் உயர்ந்தன என்று டொரொண்டோவை தளமாகக் கொண்ட அடமான தரகர் மார்ஷல் டல்லி தெரிவித்தார். “துரதிர்ஷ்டவசமாக, அந்த போக்கு தொடரலாம்,” என்று டல்லி கூறினார். கனடா அடமான மற்றும் வீட்டுவசதி கழகத்தின் (CMHC) படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 14 லட்சம் அடமானங்கள் புதுப்பிக்கப்படும் — இது அனைத்து அடமானங்களில் சுமார் 23 சதவீதம். இவற்றில் பலர் 2021-ல் மிகக் […]

ஆசிரியர்களை உரிய பாடசாலைகளில் பொறுப்பேற்க அனுமதிக்காவிட்டால் வடக்கு ஆளுநர் செயலகம் முற்றுகையிடப்படும்!

வருடாந்த இடமாற்றங்களைப் பெற்ற ஆசிரியர்களை உரிய பாடசாலைகளில் பொறுப்பேற்க அனுமதிக்காவிட்டால், வடமாகாண ஆளுநர் செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு: “சேவையின் தேவை” என்ற பெயரில் வடமாகாண ஆளுநர் மேற்கொண்ட ஆசிரியர் இடமாற்றங்கள் தவறானவை எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அந்த இடமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றத்தில் வரவேண்டியுள்ள […]

கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில், ரூதர்ஃபோர்ட் வீதி (Rutherford Road) மற்றும் வேப்ரிட்ஜ் ட்ரெயில் (Weybridge Trail) பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த இருவரை மீட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் […]

ஈரான் அணுமின் நிலையப் பகுதி நான்காவது முறையாகத் தாக்கப்பட்டது

ஈரானின் அணுசக்தி அமைப்பின் தகவல்படி, தற்போதைய போரின் போது புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி இன்று நான்காவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. முதற்கட்ட விசாரணைகளின்படி, அணுமின் நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு “சேதம் ஏற்படவில்லை” என்றும் அதன் […]

நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைக்க நீர் வழங்கல் சபை தீர்மானம்?

கொழும்பின் பல பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள திட்டமிடப்பட்ட நீர்வெட்டு நேரத்தை மேலும் குறைப்பதற்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) திட்டமிட்டுள்ளது. நீர் வழங்கல் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இது குறித்துத் தெரிவிக்கையில், நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து நீர் விநியோகத் தடையை 8 முதல் 12 மணிநேரம் வரை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. […]

மீள ஆரம்பிக்கப்படும் வடக்குக்கான புகையிரத சேவை – முற்பதிவுகள் ஆரம்பம்

டக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 09-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கவும் கடந்த ஜனவரி 26-ஆம் திகதி முதல் இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டது. தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 09-ஆம் திகதி முதல் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. புகையிரத […]