நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் (Peel Police) தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் இன்னும் தேடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில், ரூதர்ஃபோர்ட் வீதி (Rutherford Road) மற்றும் வேப்ரிட்ஜ் ட்ரெயில் (Weybridge Trail) பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த இருவரை மீட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெரியவர் என்றும் மற்றவர் ஒரு சிறுவன் என்றும் சிபிசி நியூஸிற்கு (CBC News) பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். அந்தப் பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை சனிக்கிழமை காலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கவுள்ளதாகப் பீல் பொலிஸார் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.