டக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 09-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கவும் கடந்த ஜனவரி 26-ஆம் திகதி முதல் இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டது.
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் 09-ஆம் திகதி முதல் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. புகையிரத பயணங்களுக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு எச்சரிக்கை: சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு புகையிரதங்கள் மீண்டும் இயங்கவுள்ளதால், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.