கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான பொறுப்புணர்வும் மனநிலையும் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் புவியியல் அமைவிடமும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடைமுறைகள், சிகை அலங்காரம், உணவுப் பழக்கவழக்கங்கள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பொலீசாருடன் தொடர்புடைய விடயங்கள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, பாடசாலைகள் சார்ந்த துறைசார் பிரதிநிதிகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் முன்வைத்த கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அவை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தவகையில் வீதிகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதற்கும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் பொருத்தமான இடங்களில் CCTV கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கவும், அதற்குத் தேவையான நிதியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை நேரமான காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையும், பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரையும் வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடை செய்து, அதனைப் பொலீசார் கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை நேர போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் பொலீசாருடன் இணைந்து சமூக மட்ட அமைப்புகள் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
பொலீசார் சட்ட நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், பாடசாலைகளின் ஒழுக்க மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், சிகை அலங்கார நிலையங்கள் பாடசாலை வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டுமே சிகை அலங்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், பதிவு செய்யப்படாத சிகை அலங்கார நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துறைசார் திணைக்களங்கள் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இத் தீர்மானங்களுக்கு மேலதிகமாக பொதுமக்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் கிடைத்தால் அவற்றையும் ஆராய்ந்து தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவதை உரிய தரப்பினர் கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ்கள் உரிய இடங்களில் மட்டுமே தரித்து நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனை போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள் மேற்பார்வை செய்யுமாறும்
அறிவுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கல்வித் துறைசார் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், போக்குவரத்து துறைசார் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலகத்தின் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

3

கலெக்டர் அலுவலகத்தில் வேலை கேட்டு கதறி அழுத பஸ் கண்டக்டர்… நெல்லையில் பரபரப்பு

June 30, 2026

நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசுப் பேருந்து நடத்துனர் ஸ்ரீதம்பி துரை கதறி

koth

பிரபல கொத்து உணவக உரிமையாளர் கைதாகிவிடுதலை!

June 30, 2026

பிரபல கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல

venizu

வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது

June 30, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,700 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு

2

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் 2-ந்தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல்

June 30, 2026

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, அதிமுக அதிருப்தி அணியின் முக்கியத் தலைவர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

733964178_2130728880827596_8377232484301458787_n

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

June 30, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர்

SPSAOATECBCHTCJLUGRJKMIFIY

கனடாவில் 10 பேருடன் மூழ்கிய சுற்றுலாப் படகு: 4 பேரை மீட்ட தம்பதியினர், 6 பேர் நீரில் மூழ்கி பலியானதாக அச்சம்!

June 30, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) கடற்கரையில் 10 பேருடன் பயணித்த விசேட வாடகைச் சுற்றுலாப் படகு (Charter boat) ஒன்று

YWTATS3P5RDMXB3IJPBOSL4NVE

கனடா பிராம்ப்டனில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர வீட்டு அத்துமீறல்: ஒருவர் படுகாயம்!

June 30, 2026

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலின் (Home Invasion) தாக்குதலில் ஒருவர் பலத்த

1

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை.. 5 ஆண்டுகள் தொடரும் – திருமாவளவன் பேட்டி

June 30, 2026

‘மதுரை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தவெக

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா