வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,700 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வடக்கு வெனிசுவேலாவின் லா குவைரா மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெனிசுவேலாவைத் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு, தற்போது 600இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.