ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. ஹெய்ட்டியில் அமைதிப்பணிகளுக்காக இலங்கைப் படையினர் அனுப்பிவைக்கப்படுவது குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான […]

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையானுக்கு, நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் […]

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால்  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிப்படுத்தல்களை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் மரண் தண்டனை கைதியான […]

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலர் “அரச காணி” என அறிவித்து, அதிலிருந்து உரிமையாளரை வெளியேறுமாறு அறிவிப்பு விடுத்திருந்தார். அந்த அறிவிப்பை எதிர்த்து காணி உரிமையாளர் ஆவணங்கள் கோரியும், அவை வழங்கப்படாததால் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின்போது காணி அளவீட்டுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், யாழ்ப்பாணம் காணிப் பதிவகம், விவசாய அமைச்சு ஆகியவற்றிலிருந்து […]

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், உலகெங்கிலும் உள்ள 3 பில்லியன் பயனர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டாயமில்லை எனவும் விரும்புபவர்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான பயனர்பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பயனர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயரை எப்போது வேண்டுமானாலும் […]

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, திங்கட்கிழமை (29) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனத் தொழிலதிபரான பெண் ஆவார். திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை 12:30 மணியளவில், சீனாவின் குன்மிங் (Kunming) நகரிலிருந்து, ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான […]

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

 இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பானது நேற்று (ஜூன் 29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமலுக்கு வந்துள்ளது. இவ்விலை திருத்தத்தின்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் லங்கா ஆட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை விபரங்கள்: ஒக்டேன் 92 பெட்ரோல்: ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய […]

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகளைப் போலவே, பிரான்ஸும் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பொது சுகாதார முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் பதிவான சாதனை வெப்ப அலையின் உச்சகட்டத்தின் போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பிரான்ஸ் வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான புதன்கிழமை அன்று, 1,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் […]

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2018 ஆம் ஆண்டு எமது நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் உறுதியாக இருந்தார். நாங்களும் ஒத்துழைப்பு வழங்கினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு […]