கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக எதிர்வரும் மே 1 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறு கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று புதன்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள்,

கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக வாழ்விடத்தை கோரி அரசிடம் நீதி கேட்டு வருகின்றோம். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க தங்களை சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக சாதகமான முடிவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் காணி விடுவிப்பு தொடர்பான நினைவூட்டல் கடிதம் ஒன்றினை கையளிக்க கேப்பாபிலவு மக்கள் சென்றிருந்தனர்.

அதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியபோது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், அக்குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.

அவர்களின் கூற்றுப்படி, ஏறத்தாழ 255 குடும்பங்களுக்கு சொந்த காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்த காணி கிடைக்கவில்லை. மேலும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.

இவர்கள் வாழ்வாதாரமாக கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை நம்பியிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

“போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்பு தொடர்வது தேவையற்ற ஒன்று. ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தமது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வருகின்ற மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தன்று கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருவதாகவும், பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாறிய போதிலும் தாங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து நில விடுவிப்பு குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இன்றைய சந்திப்பின் போது, மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊடகங்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பல ஜனாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புதுக்குடியிருப்புக்கு வந்தபோதும் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

“எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. எமது நிலத்தில் உள்ள வளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது எவ்வகையிலும் நியாயமல்ல. எமது கேப்பாபிலவு மண்ணில் எங்களை வாழ விடுங்கள் என்பதே எமது கோரிக்கை” என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.