“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார்.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பங்கேற்பில் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, தனது உரையின்போது மன்னர் சார்ள்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மன்னர் சார்ள்ஸ் கூறுகையில்,

இந்த மாபெரும் கட்டடத்துக்கு அருகில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, அசைக்க முடியாத உறுதியுடன் நான் கூறுகிறேன். இது போன்ற வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.

நமக்கிடையே என்ன வேறுபாடுகள், என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் நமது மக்கள் அனைவரையும் தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கும் நமது நாடுகளின் சேவைக்காக தினமும் தங்கள் உயிரை பணயம் வைப்பவர்களின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்துவதற்குமான நமது உறுதிப்பாட்டில் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று தெரிவித்தார்.

மன்னர் தனது உரையைத் தொடங்குகையில், அமெரிக்காவின் 250வது சுதந்திர தின ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த உரையை ஆற்றுவதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

“அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் எங்களை வரவேற்ற அமெரிக்க மக்களுக்கு ராணியின் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நாடுகளின் தலைவிதிகள் நீண்டகாலமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.

நாம் தற்போது, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரை சர்வதேச சமூகத்துக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடிய மோதல்கள் இடம்பெற்று வரும் ஒரு காலகட்டத்தில், ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தில் நாம் சந்திக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 400 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், அமெரிக்க விவகாரங்களைக் கவனிக்கும் தனது வம்சத்தின் 19வது மன்னர் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது தாயாரான மறைந்த ராணி எலிசபெத்தைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரண்டாவது பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையை மன்னர் சார்ள்ஸ் பெற்றிருக்கிறார். அதையும் மன்னர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.

“1991-இல் இதே இடத்தில் உரையாற்றிய எனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

பிரிட்டிஷ் மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பையும் மரியாதையையும் வெளிப்படுத்த நான் இன்று இங்கு வந்துள்ளேன்.

நமது வரலாறு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. 1776இ-ன் உணர்வோடு பார்க்கும்போது, “பிரதிநிதித்துவம் இல்லாத வரி விதிப்பு கூடாது” (No taxation without representation) என்ற உங்கள் கொள்கை, ஒரு காலத்தில் நமக்கிடையிலான முரண்பாடாக இருந்தாலும், இன்று அது ஒரு பகிரப்பட்ட ஜனநாயக விழுமியமாக மாறியுள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் குறிப்பிட்டது போல, அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இந்த பிணைப்பு விலைமதிப்பற்றது மற்றும் உடைக்க முடியாதது.

இது நான் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் 20வது பயணம் மற்றும் மன்னராக மேற்கொள்ளும் முதல் பயணமாகும்…” என்றும் அவர் கூறியுள்ளார்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.