$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையோ இதுவரை விவாதிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி அமைச்சின் பொறுப்பு: இது போன்ற முறைகேடுகளை அந்தந்த நிறுவனங்களே கையாள்வது வழக்கம் என்றும், நிதி அமைச்சு உள்வாரி விசாரணை குழுவை நியமித்து, CID மற்றும் SLCERT ஆகியவற்றுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்க […]
புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தொடர்ந்த வழக்கில், தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி அவர் மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவைத் தவறாகப் புரிந்துகொண்ட பலரும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் கொண்டு […]
நங்கநல்லூரில் பயங்கரம்: மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் த*ற்கொ*லை!
சென்னை: ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகத் தொழில் அதிபரான மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) – நாகலட்சுமி (42) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் பிரிந்து சென்ற நிலையில், நாகலட்சுமி சுயமாகப் புடவை வியாபாரம் செய்து முன்னுக்கு வந்ததோடு, தனது இரண்டு […]
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு – கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 700+ பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை மறுநாள் (ஏப்ரல் 30) காலை 9:30 மணி முதல் மே 1-ஆம் தேதி காலை 11:07 மணி வரை சித்ரா பவுர்ணமி திதி நிலவுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 2 வரை சிறப்புப் பேருந்து […]
விவசாயி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஐகோர்ட் கிளையில் தென்காசி சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்!
மதுரை: தென்காசி அருகே விவசாயி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சப்-கலெக்டர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது தோட்டத்தில் கள் சோதனை செய்ய வந்த ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, தனது மகன் மணிகண்டனை ஆபாசமாகத் திட்டியதோடு துப்பாக்கியால் காலில் சுட்டதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி […]
“திருச்செந்தூர் டூ ஷீரடி” – முருகன் தரிசனத்தைத் தொடர்ந்து இன்று சாய் பாபாவைத் தரிசிக்கிறார் விஜய்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், அங்கு கடலில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, ‘வெற்றி […]
திறைசேரி கட்டமைப்புகளை இணையவழிக் குற்றவாளிகள் விஞ்சியுள்ளனர்- குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தகவல்

இலங்கை திறைசேரியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இணையவழிக் குற்றவாளிகள் (Cybercriminals) திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் உண்மைகளைப் சமர்ப்பித்துள்ளது. புலனாய்வு முன்னேற்றங்களை ஆய்வு செய்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், ஐந்து அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு CID விடுத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது. கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த இணையவழிக் குற்றம் தொடர்பான பல […]
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கியது: சிலிண்டர் விநியோகக் காத்திருப்பு காலம் 5 நாட்களாகக் குறைப்பு!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு, சிலிண்டர் விநியோகம் 2 வாரங்கள் வரை தாமதமானது. இந்தச் சூழலைச் சீர்செய்ய இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் […]
“என் கட்சி தோற்றால் த*ற்கொ*லை செய்வேன் என்பதா?” – சமூக வலைதளப் பதிவுகளால் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கடும் வேதனை!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில கட்சியினர் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகள் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், தேர்தல் முடிவுகளை முன்வைத்து இளம் தலைமுறையினரும் பெண்களும் காட்டி வரும் தீவிரமான மனநிலை ஆபத்தானது என்று எச்சரித்தார். குறிப்பாக, “தனது தலைவர் […]
“4-ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும்” – செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பதிலடி!
திண்டுக்கல்: “தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறிய கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், மே 4-ம் தேதி தமிழகத்தில் ‘விசில் புரட்சி’ நடைபெற்று தவெக அரியணையில் அமரும் என்று கூறியிருந்தார். இதற்குச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “விசில் சத்தம் வேறு, குண்டு சத்தம் வேறு என்பதைத் தம்பி […]