இலவச பாடநூல் திட்டம்; தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பிரதம அமைச்சரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமாசூரியவிடம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் சிங்கள மக்களைப்போல் தமிழர்களும் வரலாற்று அடிப்படைகளைக் கொண்ட, இந்த மண்ணுக்கு பூர்வீகமான சொந்த உரித்துக்கொண்ட தேசிய இனம். விஜயனும் தோழர்களும் இந்த நாட்டுக்கு வரும் முதலே பஞ்ச ரச்சரங்களுடன் நாகர்களாக, இயக்கர்களாக தமிழர்கள் ஈழத்து மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை, மகாவம்சம் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்பிடுகிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இந்த மண்ணை வன்வழைப்பு செய்து அதிகார ஆட்சி செய்த போதும் தமிழர்கள் தீரத்துடன் அவர்களுக்கு எதிராக போராடியுள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மண்ணில் அரசுகள் அமைத்து சங்கிலியன்,பண்டாரவன்னியன், பரராஜசேகரன் போன்ற மன்னர்கள் தீரத்துடன் தாயக தேசத்திற்காக போராடியுள்ளனர்.

நல்லநாச்சி போன்ற பெண் சிற்றரசர்களும் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடித் தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 ஆம் ஆண்டுக்கு பின்னர் அநாகரிக தர்மபால, டி.பி. ஜாவா போல ஆறுமுகநாவலரும் சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கவும், வளர்க்கவும் போராடியுள்ளார்.

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள்,அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ், வரலாற்று பாடநூல்களில் தமிழரின் வரலாறு ஓரளவுக்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1982களில் இலவச பாட நூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டபின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ளதை காண முடிகிறது.

கடந்த யுத்த காலங்களை பயன்படுத்தி சங்கிலியன், பண்டாரவன்னியன்,நல்லநாச்சி, எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறுகள் இல்லாதழிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா? இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா? கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?

தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா? சங்கிலியன்,பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ், வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்

pa

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

September 20, 2026

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட

WhatsApp Image 2026-09-20 at 15.25.28

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்

mo

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

September 20, 2026

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை