ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​இறந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது, ​​சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார்.

இவரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 ஜூலை மாதம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதேவேளை, சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்திருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

3e586c045ab0f90c81787c9b5cee4d6017742641998201179_original

“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு” – சாத்தான்குளம் கொலையாளிகளின் தூக்கு தண்டனை மேல்முறையீடு ஜூன் 4 முதல் தினசரி விசாரணை!

April 30, 2026

மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட

(c)PragMatrix

திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை

7

“உழைப்பால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு தரும்” – எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து!

April 30, 2026

சென்னை: உழைப்பின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் மே தினத் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி

chemmani

இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் செம்மணியில் அடையாளம்…

April 30, 2026

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண

RAPAIKGQYJDILKKEMGSNIHZB3Q

சிறுவர்கள் காணாமல் போன முதலாம் ஆண்டு நிறைவு: ‘உண்மைத் தகவல்களை’ வழங்குமாறு ஆர்.சி.எம்.பி (RCMP) கோரிக்கை

April 30, 2026

நோவா ஸ்கோடியாவில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போய் ஒரு ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், அது குறித்து “உண்மை மற்றும் ஆதாரம்

686844152_122290086698194641_8938786133197878528_n

சட்பரியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்: பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் எச்சரிக்கை

April 30, 2026

கிரேட்டர் சட்பரி (Greater Sudbury) பகுதியில் பல பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டு வரும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக்

AF67QUOEMJBA3N6PFLJTTRBN7Y

கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியப் பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரம்

April 30, 2026

ஏப்ரல் 29, 2026 – கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான 62 வயதுடைய ஆஸ்திரேலியப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான

Harshana-Suriyapperuma-1

ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை கோரப்பட்டது

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்

dead'

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட நிதியமைச்சு அதிகாரி சடலமாக மீட்பு

April 30, 2026

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2026

tnf

நல்லூரில் தமிழ்த் தேசியப் பேரவையின் மே தினக் கூட்டம்

April 30, 2026

தமிழ்த் தேசியப் பேரவையின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்

Gnanasa

இஸ்லாமிய மத அவதூறு; ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை

April 30, 2026

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில்

Vattuva

ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் இரகசியமாக உருக்குலைக்கப்படுகின்றது – சிவமோகன்

April 30, 2026

ழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்