இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின் போது வீடுகளில் இருந்து பல பெண்கள் மீட்கப்பட்டதாகவும், பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜஷினா சிங் (Jashyna Singh), ஓநீல் ஹொப்கின்சன் (Oneil Hopkinson), டைரோன் டயஸ் (Tyrone Dias) மற்றும் ஜோசப் கார்வால்ஹோ (Joseph Carvalho) ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்னிஸ்பில் யோங் ஸ்ட்ரீட் (Yonge Street) மற்றும் அல்கோனா (Alcona) பகுதிகளில் உள்ள வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ஃபெண்டானில் (fentanyl), கொக்கெய்ன் மற்றும் லோராசெபம் (Lorazepam) போன்ற போதைப்பொருட்கள் மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு, நிதி ஆதாயத்திற்காகச் சுரண்டப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. பெண்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உடல் கவச கேமரா (Body-worn camera) காட்சிகளில், மீட்கப்பட்ட ஒரு பெண்ணின் கையில் காயங்கள் மற்றும் தழும்புகள் இருப்பது தெரியவந்தது.
இந்தக் கும்பல் பெண்களைச் சுரண்டுவதற்காக “Leo’s List” போன்ற இணையதளங்களில் விளம்பரம் செய்ததாகவும், அதில் வரும் வருமானத்தில் பாதியைப் பெற்றுக்கொண்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இன்னும் ஆறு வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.