அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை காபட் வீதியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களம்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரசபை ஊடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரஜா சக்தி என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இதன்போது குறுக்கிட்டு தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் வறுமையினை ஒழிக்கும் வகையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்தே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு பிரஜா சக்தி திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் நலன்சார்ந்த அமைப்பு என்றால் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த திட்டம் மக்களின் வறுமையினை ஒழிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லையெனவும் இதற்கு அனைவரது செயற்பாடுகளும் உள்வாங்கப்படும் எனம் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்றை அமர்வில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள அரசைபாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகரசபையின் உறுப்பினர் ஜெயக்குமாரினால் இது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டிய அவசியம் தொடர்பில் உரையாற்றப்பட்ட நிலையில் இது தொடர்பிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

ஜனநாயகத்தினையும் கருத்து சுதந்திரத்தினைம் பாதிக்கும் வகையிலான சட்டங்களை கொண்டுவருவதை அனுமதிக்கமுடியாது என உறுப்பினர்கள் இதன்போது உரையாற்றிய நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவித்த நிலையில் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்

Ranil

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

April 30, 2026

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்