அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. என்றாலும் எமது நாட்டில் ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் கைவசம் வைத்திருப்பதாகவும் இப்போதைக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளத் தேவைப்படாது எனவும் ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நாட்டுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கம் திடீரென் எரிபொருட்களின் விலையை அதிகரித்திக்கிறது. அப்படியாயின் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்திருக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதிகரித்த விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்திருந்தால், அதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் தற்போது அதிகரித்திருப்பது, கையிருப்பில் இருந்த எரிபொருட்களுக்காகும்.

அதேபோன்று எரிவாயு விலையை நேற்று முதல் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான 8ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கைவசம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தற்போது எரிவாயு விலை அதிகரித்திருப்பதும் கைவசம் இருந்த எரிவாயு தொகைக்காகும். அரசாங்கத்தின் இந்த விலை அதிகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விலை அதிகரிப்பு சட்ட விராேத நடவடிக்கையாகும்.இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை குறைகூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அரசாங்கம் கறுப்புக்கடை வியாபாரிகள் போன்று செயற்பட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரித்து, பாரிய லாபத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று கறுப்பு கடை முதலாளிமார்கள் போன்று செயற்படுகிறது.

இவர்கள் எதனை செய்வதில்லை என தெரிவித்தார்களோ அதனை செய்கிறார்கள். மின்சார சபையை தனியார் மயமாக்கப்போவதில்லை என்றார்கள். அதனை தற்போது செய்திருக்கிறார்கள்.

தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவருவதில்லை என்றார்கள். தற்போது அதனை செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் செய்வதில்லை என மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் இன்று செய்துவருகிறது. அதனால் தொடர்ந்தும் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பப்போவதில்லை என்றார்.

456

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

March 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான

chandra

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

March 12, 2026

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு

aa

இலங்கையில் அயோரா தினம்!

March 12, 2026

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கமான (IORA) தினம் மார்ச் 11 ஆம் தேதி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்

chaminda

அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

March 12, 2026

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க

fmm

இலங்கையில் ஊடகவியலாளர் அவமதிப்பு – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

March 12, 2026

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

sale

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

March 11, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்

tha

குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

March 11, 2026

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த

shi

சிறப்பு கப்பல் படை தலைமையக படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பயிற்சி

March 11, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and

ceb v

20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

March 11, 2026

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்

ve

இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

March 11, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்

ch

கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

March 11, 2026

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் –

po

அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

March 11, 2026

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ