அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. என்றாலும் எமது நாட்டில் ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் கைவசம் வைத்திருப்பதாகவும் இப்போதைக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளத் தேவைப்படாது எனவும் ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதனை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நாட்டுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கம் திடீரென் எரிபொருட்களின் விலையை அதிகரித்திக்கிறது. அப்படியாயின் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்திருக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதிகரித்த விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்திருந்தால், அதன் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் தற்போது அதிகரித்திருப்பது, கையிருப்பில் இருந்த எரிபொருட்களுக்காகும்.

அதேபோன்று எரிவாயு விலையை நேற்று முதல் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான 8ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு கைவசம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தற்போது எரிவாயு விலை அதிகரித்திருப்பதும் கைவசம் இருந்த எரிவாயு தொகைக்காகும். அரசாங்கத்தின் இந்த விலை அதிகரிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விலை அதிகரிப்பு சட்ட விராேத நடவடிக்கையாகும்.இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். கடந்த கால அரசாங்கங்களை குறைகூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அரசாங்கம் கறுப்புக்கடை வியாபாரிகள் போன்று செயற்பட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை அதிகரித்து, பாரிய லாபத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று கறுப்பு கடை முதலாளிமார்கள் போன்று செயற்படுகிறது.

இவர்கள் எதனை செய்வதில்லை என தெரிவித்தார்களோ அதனை செய்கிறார்கள். மின்சார சபையை தனியார் மயமாக்கப்போவதில்லை என்றார்கள். அதனை தற்போது செய்திருக்கிறார்கள்.

தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவருவதில்லை என்றார்கள். தற்போது அதனை செய்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் செய்வதில்லை என மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்து விடயங்களையும் இன்று செய்துவருகிறது. அதனால் தொடர்ந்தும் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பப்போவதில்லை என்றார்.

Suresh Salley Arrested-828580

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் புதிய தகவல்கள்: சுரேஷ் சல்லே மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

April 29, 2026

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாகத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர்

FB_IMG_1777466129432

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழு அறிவிப்பு

April 29, 2026

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் (Transformation Committee) தலைவராக, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள்

canada police26

பிராம்ப்டன் பாலியல் வன்கொடுமை விசாரணை: 17 வயது சிறுவன் கைது

April 29, 2026

பிராம்ப்டனில் (Brampton) நடந்த பாலியல் வன்கொடுமை விசாரணை ஒன்றைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு அவன்

canada police251

ஹாமில்டன் பள்ளி வெடிகுண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது

April 29, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாமில்டனில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 13 வயது சிறுவன் மீது

30

கனடாவில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பாவுக்கு புகழ்வணக்க நிகழ்வு

April 29, 2026

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கான புகழ் வணக்க நிகழ்வொன்றை நாளை 30ஆம் திகதி வியாழக்கிழமை கனடா தமிழர் கலைபண்பாட்டுக்

ranil-wickremesinghe

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

April 29, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை

whea

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

April 29, 2026

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை

sc

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு: இரண்டாம் நாள் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை!

April 29, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய