குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமாரி ஹோட்டலில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நாட்டிற்குள் எவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்பது பற்றி பேச வேண்டியது அவசியமாகும். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமித்து அந்த நியமனங்களை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி, தேவையற்ற விதத்தில் அனைவரிடமும் பழிவாங்கும் நடவடிக்கைகளே இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, அரசியல் ரீதியாகத் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே தற்போது இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் 70 வருட சாபம் பற்றிப் பேசினார்கள். உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது இங்கும் விலை உயர்த்தப்பட்டால் அரசாங்கம் எதற்கு என்று அன்று கேட்டார்கள். இது போன்ற பல விடயங்களை எம்மால் கூற முடியும்.

ஆனால், அந்த விடயங்களைப் பேசுவதற்கு முன்னதாக, இந்த நாட்டில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கருத்தைக் கொண்டிருந்தாலும், 60 வருடங்களுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வர முடிந்தமைக்குக் காரணம், கடந்த காலங்களில் ஜனநாயகத்தை மதித்து இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் நின்று அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையே ஆகும்.

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் எதையும் காணக் கூடியதாக இல்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பு கொண்டு வரப்பட்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் ஒரு சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க முடியாமல் போயுள்ளது. நியமிக்கப்பட்ட தலைவர் சில நாட்களிலேயே பதவி விலகினார். இந்த விடயத்தைக்கூட இவர்களால் முறையாக முன்னெடுக்க முடியாமலுள்ளது.

நீதிமன்றம் பல பணிகளைச் செய்து வருகின்றது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அமைச்சர் குமார ஜயகொடி தொடர்பாகக் கிடைக்கவுள்ள தீர்ப்பை இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில், நீதித்துறையின் மீதுள்ள முழுமையான கௌரவத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் அவ்வாறே பேணப்படும் என்ற நம்பிக்கையில், இந்த வழக்கு நடவடிக்கைகளும் சரியாக முன்னெடுக்கப்பட்டு சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

இந்த நாட்டுக்காக வரலாற்றில் இருந்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காக எதையாவது செய்த கட்சிகளாகும்.

எனவே, இந்த நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில

Sri-Lankan-Parliament-Complex

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

April 30, 2026

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த

heat

இன்று அதிக வெப்பநிலை

April 30, 2026

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில்

Arrest_1

பெண் வைத்தியர்களை தகாத விதத்தில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

April 30, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த

anu

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதி விசேட உரை!

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய

Ha6t

பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

April 30, 2026

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட