யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது என தெரிவிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் கஞ்சப்பட போவதில்லை. கப்பலை பாதுகாக்க எடுத்த உறுதியான தீர்மானம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே எடுத்திருக்கிறார். அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முதுகெலும்பு இருக்கும் தலைவர் இருக்க வேண்டும்.

அதேநேரம் ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததுபாேன்று, யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபனியாது சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்.

ஏனெனில் இந்த யுத்தத்தில் நாங்கள் யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நாங்கள் சுயாதீன நாடு என்பதை உலகுக்கு காட்ட வேண்டும். வல்லரச நாடுகளின் தலைவர்களுக்கு எப்போதும் பொறுமையும் செயற்படும் ஆற்றல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் நினைத்ததை செய்யும் போக்கு இருக்க முடியாது. கடலில் இருந்த ஈரான் கப்பலை தாக்காமல் அமெரிக்காவுக்கு அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைப்பற்றி இருக்கலாம். அதுதான் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று எங்களுக்கு மனித உரிமை தொடர்பில் கற்றுத்தரும் இவர்கள்தான் அப்பாவி உயிர்களை போக்கி இருக்கிறார்கள். எமது நாட்டில் 2009ல் யுத்தம் முடிவடைந்து தற்போது 2026 ஆகியும் மனித உரிமை மீறியதாக எமது ராணுவ வீரர்களை தூக்கில் போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை தேடுகிறார்கள். ஆனால் இன்று இவர்கள் காலை முதல் மாலை வரை அப்பாவி உயிர்களை கொன்று வருகிறார்கள். இதன்போது மனித உரிமை என ஒன்றும் பார்ப்பதில்லை.

அதனால் அரசாங்கம் இந்த யுத்தத்தின்போது யாருடைய பக்கமும் இருக்காமல் சர்வதேச சட்டத்திற்கமை செயற்பட்டு தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்

screenshot-2025-12-19-133643

பிரம்டனில் 14 வயது சிறுமிமாயம்  கண்டுபிடித்துத் தருமாறு பீல் காவல்துறை மற்றும் குடும்பத்தினர் அவசர கோரிக்கை!

June 25, 2026

பிரம்டன் (Peel Region): கனடா, ஒன்டாரியோவின் பிரம்டன் (Brampton) நகரில் வசித்து வரும் 14 வயதுடைய ஏவா (Ava) என்ற

9

அன்பில் மகேஸ் ஊழல் செய்யவில்லை என தைரியமாக கூறுவாரா? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

June 25, 2026

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக-வின்

8

சோதனை காலம் முடிந்தது; வசந்தகாலம் வரப்போகிறது! – வைகோ பேச்சு

June 25, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் அடுத்தக்கட்ட

sana

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் – சாணக்கியன்

June 25, 2026

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்

default (37)

கனடா முன்பள்ளியில் சிறுவர்கள் மீது கொடூரம்: தலைமுடியை இழுத்து, கழிவறைக்குள் பூட்டி சித்திரவதை செய்த ஆசிரியை!

June 25, 2026

டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten

728370208_1320477406895994_2924890339714314159_n

கனடா: சர்ரே மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு விவகாரம்! இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது அதிரடியாகப் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

June 25, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்

5

விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

June 25, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலையக இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்