யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது என தெரிவிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் கஞ்சப்பட போவதில்லை. கப்பலை பாதுகாக்க எடுத்த உறுதியான தீர்மானம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே எடுத்திருக்கிறார். அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முதுகெலும்பு இருக்கும் தலைவர் இருக்க வேண்டும்.

அதேநேரம் ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததுபாேன்று, யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபனியாது சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்.

ஏனெனில் இந்த யுத்தத்தில் நாங்கள் யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நாங்கள் சுயாதீன நாடு என்பதை உலகுக்கு காட்ட வேண்டும். வல்லரச நாடுகளின் தலைவர்களுக்கு எப்போதும் பொறுமையும் செயற்படும் ஆற்றல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் நினைத்ததை செய்யும் போக்கு இருக்க முடியாது. கடலில் இருந்த ஈரான் கப்பலை தாக்காமல் அமெரிக்காவுக்கு அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைப்பற்றி இருக்கலாம். அதுதான் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று எங்களுக்கு மனித உரிமை தொடர்பில் கற்றுத்தரும் இவர்கள்தான் அப்பாவி உயிர்களை போக்கி இருக்கிறார்கள். எமது நாட்டில் 2009ல் யுத்தம் முடிவடைந்து தற்போது 2026 ஆகியும் மனித உரிமை மீறியதாக எமது ராணுவ வீரர்களை தூக்கில் போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை தேடுகிறார்கள். ஆனால் இன்று இவர்கள் காலை முதல் மாலை வரை அப்பாவி உயிர்களை கொன்று வருகிறார்கள். இதன்போது மனித உரிமை என ஒன்றும் பார்ப்பதில்லை.

அதனால் அரசாங்கம் இந்த யுத்தத்தின்போது யாருடைய பக்கமும் இருக்காமல் சர்வதேச சட்டத்திற்கமை செயற்பட்டு தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில

Sri-Lankan-Parliament-Complex

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

April 30, 2026

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த

heat

இன்று அதிக வெப்பநிலை

April 30, 2026

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில்

Arrest_1

பெண் வைத்தியர்களை தகாத விதத்தில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

April 30, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த

anu

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதி விசேட உரை!

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய

Ha6t

பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

April 30, 2026

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட