தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலம் இலங்கையின் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஆவணம் என்பது தெளிவாகிறது.

ஆனால் அதனை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் பல சிக்கல்கள் மற்றும் இதுபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதின் ஊடாக இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கும், நிலைக்கொண்டிருக்கும் ஊடக கலாச்சாரத்திற்கும் ஏற்படக்கூடிய அழுத்தம் தொடர்பிலும் பல விடயங்களை கதிக்காக கலந்துரையாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

இதன் போது குறிப்பாக நிறுவனத்தின் தன்மை, அதாவது இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனமானது கட்டமைக்கப்பட்ட அரச நிறுவனமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வது மிக அவசியமாக உள்ளது. அது அவ்வாறாக இருந்தால், இலங்கை ஊடக சமூகம் எதிர்பார்க்கும் சுயாதீன நிறுவனமாக அமையாவிட்டால் இலங்கையின் சுதந்திர ஊடக கலாச்சாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.

அதேபோன்று நிறுவனத்தின் அலுவல்களை முகாமைத்துவ மற்றும் நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் இடைக்கால சபையானது அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளரின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிப்பதின் ஊடாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால் செய்தி ஆசிரியர் சங்கம், டிஜிட்டல் ஊடக ஒலிபரப்பாளர்களின் சங்கம் பத்திரிக்கை வெளியிட்டார்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் இணக்கபாடும் இதற்கு பெறுவது முக்கியமாக இருக்கும்.

மேலும் உத்தேச இலங்கை பட்டய ஊடகவியலாளர்களின் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடைக்கால சபையின் ஒரு வருடத்திற்குப் பின் உறுதிப்படுத்தப்படும் நிர்வாக குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில் ஏற்படக்கூடிய பாதக நிலைகள் மற்றும், முடிவுகள் எடுக்கும் போது பெரும்பான்மை வாக்குகள் ஐவருக்கு என்று முடிவு செய்து இருப்பதின் காரணமாக மூவரைக் கொண்ட குழுவிற்கு முடிவுகளை எடுக்க முடியாமல் போகக்கூடிய சூழல்களில் ஏற்படக்கூடிய பாதக நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால் நாட்டின் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைப்பு என்ற விதத்தில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்புகளிடத்திலும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இதனை முழுமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இலங்கையின் ஊடக மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அரசாங்கம் தற்போது தயாரித்துள்ள தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்து ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்லுமாறும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற விதத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான