அமெரிக்காவை கண்டிப்பதற்கு அரசு அச்சப்படுகிறது – எம்.பி. உதுமாலெப்பை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்த அமெரிக்காவை கண்டிப்பதற்கு ஜனாதிபதி உள்ளி்ட்ட அரசாங்கம் அச்சப்படுவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(5) இடம்பெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஜனநாயக நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே ஈரான் மீதும் தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு முன்னர் ஈராக்கில் தலையிட்டு அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து இல்லாமல் செய்தார்கள். லிபியாவில் தலையிட்டு மொஹமட் கடாபியை இல்லாமல் செய்தார்கள். வெனிசுலாவில் அத்துமீறி தலையிட்டு, அந்நாட்டு ஜனாதிபதியை கைது செய்து, அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள். இது எந்தவகையில் நியாயமாகும்.

அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையும் கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் காரணமாக இன்று மத்திய கிழக்கில் அமைத்தியற்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பணிபுரிந்து வரும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எமது இலங்கையர்களின் தொழில் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு ஆளும் தரப்பினர் அச்சப்படுகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பில் கதைப்பதாக இருந்தால் இவர்களின் தொடை கடுங்குகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் ஆன்மிக தலைவரை கொலைசெய்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயலை கண்டிப்பதற்கு அச்சப்படுவதையிட்டு, முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது.

அதனால் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்து, அமெரிக்காவின் இந்த படுகொலையை அரசாங்கம் கண்டிக்கவேண்டும். குறிப்பாக ஈரானில் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கொலை செய்திருக்கும் இந்த செயலைக்கூட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிக்க முடியாத அளவுக்கு இவர்கள் அச்சப்படுகிறார்கள் எனறார்.

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

கெலும் பண்டார இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே,

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்

Ranil

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

April 30, 2026

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது