லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவு, 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் (லயன் குடியிருப்பு) இன்று (01.06.2026) திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக மூன்று குடியிருப்புகள் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இன்று காலை வீடொன்றில் திடீரெனப் பற்றி எரியத் தொடங்கிய தீ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.
தீப்பரவலைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக ஒன்றிணைந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், இந்தத் தீப்பரவலில் இரண்டு தொழிலாளர் வீடுகள் முற்றfactoryகக் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன், மற்றொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குடியிருப்புகளில் இருந்த மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் சென்றிருந்ததாலும், சிலர் வீடுகளுக்கு வெளியே இருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகளில் இருந்த பெறுமதியான ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லுனுகலை பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தீப்பரவலானது மின்சாரக் கசிவு (மின் ஒழுக்கு) காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.