இலங்கை எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்: சுகாதார அமைச்சு

எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்துள்ளதாகப் பொதுச் சுகாதார நிபுணர் மருத்துவர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எபோலா வைரஸ் பரவல் நிலைமை குறித்து இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் சுமார் 50 சதவீதமாகக் காணப்படுவதால், உலக சுகாதார அமைப்பும் (WHO) உலகளாவிய சுகாதார அதிகாரிகளும் இந்நோய் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மருத்துவர் தபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:

“எபோலா வைரஸானது மனிதர்கள் மற்றும் கொரில்லாக்கள், சிம்பன்சிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளைப் பாதிக்கக்கூடியது. அத்துடன், தொற்றுக்குள்ளானவர்களின் இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களுடனான நேரடித் தொடர்புகளின் மூலமே இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது.”

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு ஏற்கனவே இதற்கான ஆயத்தத் திட்டங்களைச் செயல்படுத்தி, உருவகப்படுத்துதல் பயிற்சிகளையும் (Simulation Exercises) நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ் ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எபோலா பரவல் பதிவாகியுள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளைக் கண்காணிப்பதற்காக விசேட கண்காணிப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவு, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக வருகை தரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் வெளிப்படுத்தும் நபர்கள் பற்றிய தகவல்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக உடனடியாகத் தொற்றுநோயியல் பிரிவுக்கு (Epidemiology Unit) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சையளிப்பதற்காக, அங்கொடை தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனம் (IDH) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தேவையான சிகிச்சை முறைகளும் தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏற்கனவே அங்குப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் துஷானி தபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

708168729_1516805196511395_2514990978381416714_n

உளநல விழிப்புணர்வு!

June 1, 2026

உளநல விழிப்புணர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) பி. ப 03.00

மீகொட வாகன விபத்து வழக்கு: நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

June 1, 2026

மீகொட பகுதியில் உள்ள வெசாக் தன்சல் (தானப்பந்தல்) ஒன்றில் இடம்பெற்ற கொடிய விபத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுநர் வரும் ஜூன்

Gnanasa

ஜூன் 26 ஆம் திகதி ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை

June 1, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கான, விசாரணை திகதிகளை

lun

லுனுகலையில் திடீர் தீ விபத்து: குடியிருப்புகள் தீக்கிரை

June 1, 2026

லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவு, 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் (லயன்

epo

இலங்கை எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்: சுகாதார அமைச்சு

June 1, 2026

எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்துள்ளதாகப் பொதுச் சுகாதார

Education

2027ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைப் பரீட்சைக் காலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

June 1, 2026

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணைகள் மற்றும் பாடசாலைத் தவணைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. கல்வி

Bus

பேருந்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்கவும்

June 1, 2026

சனிக்கிழமை (30) அன்று மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இடைக்காலப் பேருந்து கட்டணத் திருத்தம் ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை

jv

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் மோதல்?

June 1, 2026

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தி மோதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக ஆளுங்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

jv

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் மோதல்?

June 1, 2026

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தி மோதல் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக ஆளுங்கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

photo-collage.png (44)

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கையெழுத்துப் போராட்டமும்!

June 1, 2026

நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி, இன்று வவுனியா பழைய பேருந்து

LPG Commercial

“ஜூன் மாத தொடக்கத்திலேயே அதிர்ச்சி!” – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; வணிக சிலிண்டர் விலை ரூ.46 அசுர வேக அதிகரிப்பு!

June 1, 2026

சென்னை: “மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதிச் சுமையைக்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தால் முதல்வர் மன்னிக்க மாட்டார்!” – மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அசுர வேக அதிரடி எச்சரிக்கை!

June 1, 2026

மதுரை: “தமிழ்நாட்டின் உன்னத இயற்கை வளங்களை அநியாயமாகக் கொள்ளையடிப்பது எந்தவொரு பெரிய புள்ளியாக இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்