ரஷ்யா மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் கடும் குளிரை எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த இடைவேளையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீவ் நகரில் பல பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் “தனிப்பட்ட வேண்டுகோளுக்கு” இணங்க, உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை வரை நிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்திருந்தது.

2022 பெப்ரவரியில் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அபுதாபியில் நடைபெற்ற முதலாவது முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கீவ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கீவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகசென்கோ (Tymur Tkachenko) டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, கிழக்கு உக்ரைனில் உள்ள டினிப்ரோ (Dnipro) நகரமும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் எரிசக்தி நிலையங்கள் அல்லது முக்கிய நகரங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தாலும், தளவாடப் போக்குவரத்து வழிகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அடுத்த சுற்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அபுதாபியில் நடைபெறும் என்பதை கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை