கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர்.

இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது.

வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.

அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

arres

பல்கலைக்கழக மாணவனின் விபரீத ஆசை! பிரெஞ்சுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி – உனவடுனவில் பரபரப்பு!

May 1, 2026

​​இலங்கையின் சுற்றுலா சொர்க்கமான உனவடுனவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர் வாடகை வாகனத்தில்

Screenshot_20260501_140015_Gallery

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாச சவால்

May 1, 2026

மக்கள் தங்களது மக்கள் ஆணையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

Y5VYXVPWLJCSPJ4XUVXEZUUAZ4

மருத்துவமனையில் ‘போலித் துப்பாக்கி’ வைத்திருந்த நோயாளி: 76 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது காவல்துறை

May 1, 2026

நயாகரா பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மருத்துவமனையில் நோயாளியாக இருந்தபோது அவரிடம் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர்

cANADA ROAD

முக்கிய போக்குவரத்து பாதிப்பு: மில்டன் அருகே 401 நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதல் – இரண்டு வழித்தடங்கள் மூடல்

May 1, 2026

மில்டன் (Milton) அருகே நெடுஞ்சாலை 401-ன் மேற்கு நோக்கிய (Westbound) பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பல வாகன விபத்துகள் காரணமாக,

canada security

பீபா (FIFA) மாநாடு: உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக வான்கூவரில் பலத்த பாதுகாப்பு

May 1, 2026

வியாழக்கிழமையன்று வான்கூவரில் நடைபெற்ற 76-வது பீபா (FIFA) மாநாடு, உலகம் முழுவதிலுமிருந்து கால்பந்து அதிகாரிகளை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு

Sanak

அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

May 1, 2026

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக

sin

சின்மயா மிஷனின் அமிர்த யாத்திரை; யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

May 1, 2026

சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “சின்மயா அமிர்த யாத்திரை” யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷனின் இளைஞர்

Chemma

பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு செம்மணியில் மீட்பு!

May 1, 2026

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது

sea

2010 தொடக்கம் 2026 ஏப்ரல் வரை 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்கப்பட்டனர்!

May 1, 2026

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19

fsfs

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!

May 1, 2026

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ”

Chand

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

May 1, 2026

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே

tho

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

May 1, 2026

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார