ரவீந்திர தீப் குலசேனவின் உரிமை கோரல் சட்டவிரோதம் – லங்கா சமசமாஜக் கட்சி எச்சரிக்கை

லங்கா சமசமாஜக் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினருமான சந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயற்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் வெற்றிடம் நிலவி வருகின்றது. இப்பதவி குறித்து கட்சியின் உட்புறத்தில் எழுந்துள்ள பிணக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானிப்பதை தேர்தல் ஆணைக்குழுவும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களாக ரவீந்திர தீப் குலசேன என்பவர் தான்தான் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் என அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்.

இச்செயற்பாடானது கட்சியின் கௌரவத்திற்கும் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்திற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.தற்போது கட்சியின் மத்திய குழு அரசியல் குழு மற்றும் பொருளாளர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அனைவரும் கட்சி காரியாலயத்திலேயே ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக எமது பொருளாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமே அதற்கான சான்றாகும். கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வாறான போலி உரிமை கோரல்களை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இக்கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை ரவீந்திர தீப் குலசேன உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதனைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு எதிராக மிக விரைவில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்கின்றோம் என்றார்.

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து