முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், “நினைவாயுதம்” எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்றைய தினம் சனிக்கிழமை (16) ஆரம்பமானது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.
தமிழினப் படுகொலை தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி திங்கட்கிழமை (18) வரை நடைபெறுகிறது.