தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும் முக்கிய பங்காற்றியதாக மகா சங்க மாநாட்டில் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
மகா சங்க மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பௌத்த பிக்குகள் தமது வரலாற்றுப் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கவில்லை என குறிப்பிட்டார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், எமது காவி உடை தன் வரலாற்றுப் பொறுப்பையும் கடமையையும் தொடர்ந்து நிறைவேற்றியது. நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்புவதில் பிக்குகளின் தியாகம் முக்கியமானதாக அமைந்தது” என அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்தார்.