சென்னை:
தமிழகத்தின் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நடைபெற்று வரும் நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை செயலாளர் சீனிவாசன், சி.வி.சண்முகத்தின் பெயரைப் பதவியேற்க அழைத்தபோது, அவர் அவையில் இல்லாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாகச் சட்டசபைக்குத் தனியாளாக வந்த சி.வி.சண்முகம், பதவியேற்காமலேயே அவையை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனித்தனி குழுக்களாகச் சட்டசபைக்கு வந்ததும், எஸ்.பி. வேலுமணி பதவியேற்ற போது அதிக வரவேற்பு கிடைத்ததும் அதிமுக-வுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சி.வி.சண்முகம், சுமார் 34 எம்.எல்.ஏ-க்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த எம்.எல்.ஏ-க்கள் குழு தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பரவும் தகவல்கள், அதிமுக-வில் மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதை உறுதிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் எஸ்.பி. வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சி.வி.சண்முகத்தின் இந்த “மாயம்” தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
#CV_Shanmugam #ADMK_Crisis #EPSvsSPV #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #FortStGeorge #MLAOathTaking #ADMKSplit #PoliticalDrama #ThalapathyVijay #NewGovernmentTN #OppositionCrisis #StalinVsVijay #ElectionResults2026 #TamilNews #VijayMakkalIyakkam_“`