தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் இரண்டு துறைகளுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இது உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் ஒரு சங்கிலித் தொடரான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் நலிவடைந்துள்ள மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இந்தத் திடீர் விலை உயர்வுகளால் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலப் பேரிடர்களின் போது ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணங்கள் கூட இன்னும் முழுமையாக இம்மக்களைச் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட இருப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக விசேட நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். சமையல் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், மலையக மக்களின் பிரதான உணவுத் தேவையான கோதுமை மாவை சலுகை விலையில் தடையின்றி விநியோகிப்பதற்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி, தோட்டங்களில் வசிக்கும் அனைத்துத் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் அல்லாத குடும்பங்களுக்கும் சென்றடைவதை மாவட்ட மற்றும் பிரதேச செயலர்கள் ஊடாக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

நிவாரணப் பொதிகளுக்கு அப்பால், தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினையான காணி உரிமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசிப்பிடத்திற்காகக் குறைந்தது 10 பேர்ச் காணியையாவது சட்டப்பூர்வமாக ஒதுக்கித் தர வேண்டும். இது மக்களின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

இதற்காகத் தற்போது நடைமுறையிலுள்ள காணி குத்தகைச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டத் திருத்தங்களுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி மாத்திரமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றன. எனவே, அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தாது இந்த காணி உரிமையினை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

கெலும் பண்டார இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே,

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்

Ranil

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

April 30, 2026

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக