திருவண்ணாமலை:
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை 100 கல்வி நிறுவன பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் மே 2-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குப் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேரக் கட்டுப்பாடின்றித் தொடர்ச்சியாக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 100 மினி பேருந்துகள் 10 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி அன்று அண்ணாமலையார் மற்றும் செங்கம் வழித்தடங்களில் இயக்கப்படும் இலவசப் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோடு, அவை தனிப் பாதையில் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் ‘கி.பி.ஆர். கோடு’ (QR Code) ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க 30 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
#Tiruvannamalai #ChitraPournami2026 #FreeBusService #Girivalam #Arunachaleswarar #DevoteesSafety #TransportationUpdate #TamilNaduNews #BreakingNews #Pilgrimage #TNElection2026 #SpiritualIndia #BusRoute #CollectorTharpagaraj #TrafficControl #April30