ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள்

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம் தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, இன்று (30) மாலை குளியாப்பிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ராஜபக்ஷ உயிரிழந்து கிடப்பதாக இன்று மதியம் தகவல் கிடைத்ததாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ராஜபக்ஷ தோட்டத்தில் விழுந்து […]
இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்காலத்தில் சர்வதேசம் முகம் கொடுத்துள்ள ஏகாதிபத்யவாத இனப்படுகொலைகளை நிகழ்த்தும் போருக்கு எதிராகவும், அதனோடு கூட எமது நாட்டில் இடம்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் இந்நிகழ்வை நினைவுகூருகின்றோம். பட்டாம்பூச்சி விளைவுபோன்று சர்வதேசத்தில் அரங்கேறும் இவ் அராஜக செயற்பாடானது உலகின் வறிய, வளர்முக […]
வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் வியாழக்கிழமை (30.04) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா ஏ9 வீதியில் போராட்ட பந்தலில் நடைபெறும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் 3356வது நாளை எட்டியுள்ளது. இந்தச் சிறிய கூடம் இன்று உலகுக்கு ஒரு உண்மை, […]
புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத் தயாராக இருப்பதாக புடின் முன்வந்ததாகவும் ஆனால் அந்த உதவியை தாம் நிராகரித்ததாகவும், அதற்கு பதிலாக உக்ரைன் போரைக் கைவிட வேண்டும் என புடினிடம் கேட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு கண்காணிப்பு அமைப்பான International Atomic Energy Agency (IAEA) தெரிவித்ததாவது, ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றும் முயற்சியில் ரஷ்யா இன்னும் தயாராக […]
டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முழுமையாக அழிந்துள்ள நிலையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீ வைப்புச் சம்பவமாக (Arson) இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் விபரங்கள்: புதன்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் ‘டொரன்டோ ஹம்பர் யாட் கிளப்’ (Toronto Humber Yacht Club) கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் […]
யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா மண்டபத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாவீரரின் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தேனிசை செல்லப்பாவின் திருவுருவ படத்திற்கு மதத் தலைவர்கள் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவாக கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களின் வரிகளில் விமலின் இசையமைப்பில் […]
போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்கள், தங்களது மூத்த தேரர் (குரு ஹாமதுருவோ), பிரதேச பௌத்த தலைவர் மற்றும் தத்தமது நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க இது குறித்துத் தெரிவிக்கையில், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், அண்மைக்காலமாக […]
திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும் பரிமாற்றங்கள், உரிய தரப்பினரைச் சென்றடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய CoPF கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் முக்கிய விபரங்களை வெளியிட்டார்: நிதி விபரம்: கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் […]
வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை
வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் […]
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17 முக்கிய நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் மே 4-ம் தேதிதான் தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று பதிவான வெப்ப அளவுகளின்படி, வேலூரில் அதிகபட்சமாக 108.32° பாரன்ஹீட் (42.4° செல்சியஸ்) பதிவாகியுள்ளது. அதனைத் […]