பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன மற்றும் நாவுல ஆகிய பகுதிகளில் பிரபலமான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு குறித்த ஆசிரியரை, மாணவி ஒருவரின் தந்தை தாக்கியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்கும் போதே இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மாணவி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர் மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசிகளைப் பரிசோதனைக்கு […]

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்குக் காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. மேலும் கூறியதாவது, “மலையகம் நீலகாமம் […]

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். செவ்ரான் (Chevron) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள […]

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரை வெப்பத்தாக்கத்தால் 39 நேரடி பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதனுடன், மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கங்கள் புதிதாக இல்லை […]

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று(29) காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அந்த தணிக்கை அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு வழங்க கணக்காய்வாளர் நாயகம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் […]

இன்று அதிக வெப்பநிலை

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறான வெப்பமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தினால் இன்று (30) தினத்திற்காக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பெண் வைத்தியர்களை தகாத விதத்தில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் (U-19) உறுப்பினர்கள் என நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளதோடு, அவ்வாறு பெறப்பட்ட காணொளிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பது […]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதி விசேட உரை!

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்று (30) நடைபெறவுள்ள நிதி பற்றிய குழு கூட்டத்தில் ஹர்ஷன சூரியப்பெருமவினால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்து, அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே கௌசல்ய ஆரியரத்ன இதனைக் குறிப்பிட்டார். 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை […]

பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த 34 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் […]