முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026 இன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாடானது, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது