நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் சௌதோல் (Southall) பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று(13.05.2026) நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் தமிழ் மக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ மக்களுக்கு உணவாக வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறும் அதன் மனிதாபிமானப் பின்னணியும் இந்த நிகழ்வின் மூலம் நினைவுகூறப்பட்டுள்ளது. மேலும், […]
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வவுனியாவில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது. இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன் நகர […]
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீது தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டன. இந்த உயர்மட்டச் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமான் கடற்கரைக்கு அப்பால் தமது கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களை உடனடியாக வெளியிடாத இந்தியா, கப்பலில் இருந்த ஊழியர்கள் […]
ஈரான் விவகாரத்தில் உதவ முன்வந்தார் அதிபர் ஷி ஜின்பிங் – டொனால்ட் ட்ரம்ப் தகவல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்குத் தான் உதவத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது பேச்சுவார்த்தையின் போது தெரிவித்ததாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரான் எண்ணெயை அதிகளவில் நுகரும் நாடான சீனா, அந்த நாட்டுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. முக்கிய தகவல்கள்: அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பம்: ஈரான் விவகாரத்தில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதை அதிபர் ஷி விரும்புவதாகவும், “என்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமென்றால், நான் உதவ விரும்புகிறேன்” என […]
தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு (I.G.S. Prematilleke) உயர்நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று (14) தீர்ப்பளித்தது. சிறைத்தண்டனையுடன் மேலதிகமாக 3 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், […]
உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கு புதிய மாத்திரை

உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த ஊசிகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் உதவும் புதிய மாத்திரை குறித்த ஆராய்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத்திரை ‘ஒர்ஃபோக்லிப்ரான்’ (Orforglipron) என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளதுடன், விரைவில் பிரித்தானியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாத்திரையானது, பசியைக் குறைக்கும் ஹோர்மோன் ஒன்றின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் […]
அரசுக்கு மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணமில்லை

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு எண்ணப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கு நேற்று மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அழிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னைய காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்காக எல்லை நிர்ணயத்தை கொண்டு வந்தவர்களே, இன்று ஒன்று கூடி தேர்தலை பற்றி பேசுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடு செல்லும் கனேடியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை: விமானப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கல்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் கனேடியர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும் என கனடா அரசாங்கம் (Global Affairs Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிவுறுத்தலின் முக்கிய அம்சங்கள்: பயணத் தடங்கல்கள்: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம். அத்துடன், உங்கள் இலக்கு நாடுகளில் உள்ளூர் சேவைகள் மற்றும் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் பிற பகுதிகள்: மத்திய கிழக்கு […]
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க பிரதமர் மார்க் கார்னி புதிய திட்டம்

கனடாவின் மின்சாரக் கட்டமைப்பை 2050-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும், எரிசக்திச் செலவுகளைக் குறைப்பதற்குமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை (மே 14) ஓட்டாவாவில் வெளியிட்டார். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: செலவு குறைப்பு: இந்த மூலோபாயம் 70 சதவீத கனேடிய குடும்பங்களின் எரிசக்திச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரிய முதலீடு: மின்சாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு 1 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுப் […]
சுழிபுரம் பறாளாய் வயலில் மின்னல் தாக்கி மாணவன் பலி

இன்று மதியம் கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுழிபுரம் பறாளாய் வயலில் தனது தந்தையுடன் வேலை செய்துகொண்டிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்தார். சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவனுமான அண்ணாத்துரை வினூசன் என்பவரே உயிரிழந்தார்.