இன்று புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவாசிகள் இரண்டு நாட்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். ‘ஏன் இப்படிச் செய்கிறார்கள்?’ என்று நபியவர்கள் கேட்டபோது, அம்மக்கள், ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரண்டு நாட்களையும் பண்டிகை நாள் போல் விளையாடுவோம்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள், ‘இவ்விரண்டு நாட்களுக்குப் பகரமாக உங்களுக்கு அவற்றை விடச் சிறப்பான இரண்டு நாட்களை இறைவன் தந்துள்ளான். அவை ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாள், ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள்’ என்று கூறினார்கள்.

மேற்கண்ட நபி மொழியில் வந்துள்ளது போன்று இஸ்லாத்தில் இரண்டு பெருநாள்கள் மட்டுமே உண்டு. நோன்புப் பெருநாள் புனித ரமழான் மாத நோன்பு நோற்ற பின்பும் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றொரு கடமையான ஹஜ்ஜின் போதும் கொண்டாடப்படுகின்றன. ரமழான் மாதத்தில் நாம் நோற்ற நோன்புகளில் ஏற்பட்ட குறைகளை நீக்குவதற்காகவும் பெருநாள் அன்று ஏழைகளும் மகிழ்ச்சியோடு நோன்புப் பெரு நாளைக் கொண்டாடவும் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் இறுதிநாள் சூரியன் மறைந்தவுடன் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுப்பது கடமையாகிறது. இதை பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பின்பு கொடுத்தால் அது சாதாரண தர்மமாகவே கருதப்படும். பெருநாளுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பும் கொடுக்கலாம். (நோன்புப்) பெருநாள் அன்று காலையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப் படையாகப் பேரீச்சம் பழங்களை உண்பது நபி வழியாகும்.

தொழும் இடத்திற்கு நடந்து செல்வதும் நபி வழி ஆகும். ஆண்கள் நல்ல ஆடைகள் அணிந்து, நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். தொழும் திடலுக்கு ஒருவழியில் சென்று வேறுவழியில் திரும்புவதும் நபி வழிதான். ஆண்களும் பெண்களும் குளித்து சுத்தமாகி அதிகாலையிலேயே தொழும் இடம் செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒருவழியில் சென்று மறுவழியில் திரும்பி வருவார்கள் என நபித் தோழர் ஜாபீர் (ரழி) அறிவிக்கிறார்கள்.

பெருநாள் மகிழ்ச்சிக்குரிய நாளாகும். நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கும் அந்த மாதத்தில் அதிகமதிமாக பிரார்த்தனைகளை, தொழுகைகளை நிறைவேற்றவும் அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். எனவே, அன்று மார்க்கம் அனுமதிக்கும் வகையில் மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

குடி, கும்மாளம், டான்ஸ், தவறான வீடியோக்கள், சினிமா போன்ற மார்க்கம் தடை செய்துள்ள வழிகளில் அந்த நாளைக் கழிக்கலாகாது. மாறாக சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை வீட்டினரைச் சென்று சந்தித்து வாழ்த்து கூறுதல், நோயாளிகள் இருந்தால் அவர்களைச் சந்திக்கச் செல்லுதல் போன்ற நல்லறங்களில் ஈடுபடலாம். மார்க்கம் அனுமதிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

பெருநாட்களின் முக்கியமான நோக்கம் ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதாகும். அதனால்தான் பெருநாள் அன்று புத்தாடை உடுத்தி ‘இறைவன் மிகப் பெரியவன், இறைவன் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்கிறோம். மேலும் தொழுகையில் ‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ என்று கூறுகிறோம்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் இரண்டாவது பயனாகும். நாம் பெருநாள் கொண்டாடுவதே அவர்கள் கூறிய வழிமுறைப்படி தான். எனவே அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் முஹம்மது இறைவனின் தூதர் என்னும் கலிமாவின் பொருளை உண்மைப்படுத்துகிறோம்.

மூன்றாவது பயன் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்குவது, அதனால் ஏழைகளும் அன்று மகிழ்வாகப் பெருநாள் கொண்டாட வழியேற்படுகிறது. சமுதாய ஒற்றுமை, மக்கள் நலனில் அக்கறை போன்ற பயன்களும் இதனால் ஏற்படுகின்றன. ஏழை, செல்வந்தன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் ஓரிடத்தில சமமாக ஒன்று கூடுவதாலும் ஒருவரையொருவர் ஸலாம் கூறி வாழ்த்துவதாலும் அன்பும் சகோதரத்துவமும் பரிணமிக்கின்றன.

இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள். ‘என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாய் ஆக முடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள்’.

பெருநாளின் போது சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தப்படும். அதன் மூலம் பெற்றோர்களைப் பேணுதல், உறவினருடன் சேர்ந்து வாழுதல், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருத்தல், அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை, பெண்களுக்குத் தேவையான கணவன் – மனைவி உரிமைகளும் கடமைகளும் இறைவனுக்கு இணை வைத்தலின் தீங்குகள், மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அநாச்சாரங்கள், அவற்றின் தீங்குகள், மார்க்கம் தடை செய்துள்ள மது, விபச்சாரம், கொலை, திருட்டு, வட்டி, லஞ்சம், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற பல விஷயங்களின் தீங்குகள், அவற்றுக்குக் கிடைக்கும் இவ்வுலக மறுவுலகத் தண்டனைகள் குறித்து சொல்லப்படுவதால் மக்களுக்கு அவர்களது மார்க்கம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. இன்னும் இது போன்ற இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் காரியங்களும் இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் பல பயன்களும் உள்ளன.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க