இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை?

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த மாதம் வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (07.05.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2026.04.08 அன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்குரிய அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்கள் தொடர்பில் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மிகவும் விரைவாக மேற்படி வாகனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்கப்படுமென வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவால், 08.04.2026 அன்றைய நாள் மாலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மன்னாருக்கு உடனடியாக குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவிற்கு வாகனம் வழங்கப்படுவதில் ஒரு மாத காலமாக தொடர்ந்தும் இன்றுவரை இழுபறிநிலை நீடித்துவருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படுவதிலுள்ள இழுபறிநிலை தொடர்பாக 07.05.2026இன்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

அந்தவகையில் மாகாண அளவிலான அஞ்சல் சேவை வழங்கலில் முல்லைத்தீவு சமத்துவ நிலையில் இன்று வரை அணுகப்படவில்லை. அதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இதுவரை அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படாமை ஒரு சான்று என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வெகுசன ஊடக அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட வாகனம் திருத்த வேலைகள் நிறைவுசெய்யப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அறியமுடிவதாகவும் தெரிவித்தார்.

எனவே காலதாமதமின்றி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்குரிய அந்த வாகனத்தை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சரின் விசேட தலையீட்டை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரினார்.

இந்நிலையில் அஞ்சல் பரிவர்த்தனைக்கான வாகனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அதற்கென வரவுசெலவுத்திட்டங்களல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி விடயத்தில் வெகுசன ஊடக பிரதி அமைச்சரின் விசேட தலையீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றியைத் தெரிவித்ததுடன், கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அல்லது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அஞ்சல் பரிவர்த்தனையில் இன்னும் இழுபறி நிலை இருப்பதாக பிரதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

எனவே முன்னரே திட்டமிட்டதற்கு அமைவாக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு மேற்படி பரிவர்த்தனை வாகனம் வரும் வகையில் பிரதி அமைச்சர் விசேட தலையீட்டோடு விரைவாக அதனை உறுதிப்படுத்தித் தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்குதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் அலுவலகப் பதிலாளிகளின் நியமனந் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு 07.05.2026இன்று கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்