அமெரிக்காவின் உதவியுடன் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான கண்காட்சி!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிக் கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான புவியியல் அமைவிடம்சார் செயற்கை நுண்ணறிவு (GeoAI) தொடர்பான கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கினை, பேரனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்களுக்கான சங்கத்துடன் (ADRiMP) இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தவிருக்கிறது.

மே மாதம் 14 ஆம் திகதி இக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். மேம்பட்ட வரைபடக் கருவிகளும், அமெரிக்கா தலைமையிலான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும், அவற்றிற்கான பதிலளிப்பையும் ​எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை இந்நிகழ்வு காட்சிப்படுத்தும்.

வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலைக் கோலங்கள் போன்ற புவியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, இயற்கைப் பேரனர்த்தங்களை அதிகாரிகள் சிறப்பாக எதிர்வு கூறுவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் அவற்றிற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் GeoAI உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைவிடம்சார் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தைப் பின்பற்றி, வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அவசரகால நிலைமைகளில் விரைவான, மிகவும் துல்லியமான மற்றும் தரவுகள் மீதமைந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு இக்கருவிகள் உதவிசெய்கின்றன.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவினைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான GeoAI முன்முயற்சியினை ஆரம்பிப்பதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்தது. ADRiMP உடன் இணைந்து, பேரனர்த்த முகாமைத்துவ நிபுணர்களான கலாநிதி நொவில் விஜேசேகர மற்றும் கலாநிதி அஸ்லம் சஜா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இச்செயற் திட்டமானது, தீவிர வானிலை நிகழ்வுகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை பலப்படுத்துவதையும், நீண்டகால மீண்டெழும் திறனைக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

இச்செயற்திட்டமானது, 150 புவியியல் தகவல் அமைப்பு (GIS) தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளதுடன், பேரனர்த்த அபாய முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான, செயற்கை நுண்ணறிவினால் மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் வழங்கியுள்ளது. உதாரணமாக, வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை நிகழ் நேரத்தில் வரைபடமாக்குவதற்கும், குறிப்பிட்ட சமூகங்களை ஒரு புயல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைக் கணிப்பதற்கும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மிகவும் செயற்திறனுடைய வகையில் மக்களை வெளியேற்றுவதை திட்டமிடுவதற்கும் இக்கருவிகள் உதவியாக அமையும்.

இக்கண்காட்சியில் இவ்வாறான திறன்கள் விளக்கிக்காட்டப்படும். இலங்கை முழுவதும் ஏற்படக்கூடிய மெய்யான பேரனர்த்த சவால்களுக்கு இத்தொழிநுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில், புத்தாக்க, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட GeoAI தீர்வுகள் இக்கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கில் காட்சிப்படுத்தப்படும்.

மே மாதம் 14 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இதைப் பார்வையிடுவதற்காக பதிவு செய்தல் அவசியமாகும். பதிவு செய்வதற்கு https://arcg.is/0b9bbL2 எனும் இணைப்பினை சொடுக்கவும்.

இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://lk.usembassy.gov/ எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbSL இனைப் பின்தொடரவும்.

700143194_1655450296585491_8134693410360305297_n

ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

May 14, 2026

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026 இன்று முன்னெடுக்கப்பட்டது.

700189135_122169234878957506_7205029632651731545_n

ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன

arrest

மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர்

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,