அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க