செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கவும் – யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு மகஜர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து,   யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

செம்மணியில் இன்றைய தினம் (30) கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியதன் பின்னர் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் துறவறத்தினரும் ஆகிய நாம், இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் இலங்கையின் ஆயுத மோதலின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் அனைவரையும் குறித்த ஆழ்ந்த மேய்ப்புப்பணிசார் அக்கறையால் இம்மடலை எழுதுகின்றோம்.

2025 ஜூன் மாதத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அமைவிடத்துக்கு தாங்கள் மேற்கொண்ட வருகையை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். உண்மைக்கும் நீதிக்கும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தங்களது வருகை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்தது.

2025 பெப்ரவரி மாதத்தில் செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் அச்சமூட்டும் அளவில் மனித எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. 2026 ஜூலை 21ஆம் திகதி குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட, குறைந்தது 454 எலும்புக்கூடு எச்சத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்களும் திகதிகளும், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதும் இதுவரை இறுதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணையின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, நம்பகமான சான்றுகள் இன்றி எவர் மீதும் பொறுப்பைச் சுமத்தவோ நாம் விரும்பவில்லை.

இருப்பினும், இப்புதைப்புகளின் அளவும் சூழ்நிலைகளும், வெளிப்படையானதும் அறிவியல் ரீதியில் நம்பகமானதும் உண்மையை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவல்லதுமான சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றை அவசியமாக்குகின்றன.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் ஆய்வுக் குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க பணியை நாம் அங்கீகரிக்கின்றோம்.

இருப்பினும், தடயவியல் திறன், விசாரணைச் சுயாதீனம், சான்றுகளைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல், குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் எழுப்பியுள்ள கரிசனைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.

ac

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

July 30, 2026

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள்

z_p00-Namal-Rajapaksa

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் – நாமல் ராஜபக்‌ஷ

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டமை தவறு. கடந்த கால தவறுகள் ஊடாக

ff

37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி,

B3OFFCNFTZJGJNSYZ7YOVN3PCU

துப்பாக்கியுடன் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்குச் சிறைத்தண்டனை

July 30, 2026

தடைசெய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் கனடாவிற்குள் இரகசியமாக நுழைந்ததை ஒப்புக்கொண்ட நபருக்கு இரண்டு மற்றும் அரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக

EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency