கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து புதிய வகுப்பறைக் கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நிகழ்வில் உரையாற்றியபோது, நெடுந்தீவு என்பது ஒரு தீவு மட்டுமல்ல; ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும், தனித்துவமான பண்பாட்டு மரபையும், கடல்சார் நாகரிகத்தையும் தன்னகத்தே சுமந்து நிற்கும் பாரம்பரிய மிக்க மண் என்பதை வலியுறுத்தினேன். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் வரலாற்றுச் சின்னங்கள், பவளக் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், உலகப் புகழ்பெற்ற காட்டுக் குதிரைகள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவை நெடுந்தீவின் தனித்துவ அடையாளங்களாகும். இந்த வரலாற்றுச் செல்வங்களைப் பாதுகாத்துக்கொண்டு, நவீன அபிவிருத்தியையும் சமநிலையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதையும் குறிப்பிட்டேன்.
மேலும், தீவுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், தகவல் தொழில்நுட்ப வசதிகள், மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதையும், நெடுந்தீவின் முழுமையான அபிவிருத்திக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து செயற்படுவேன் என்பதையும் உறுதியளித்தேன்.
புதிய வகுப்பறைக் கட்டிடம் என்பது வெறும் சிமெண்டும் கற்களும் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிடம் அல்ல; அது அறிவை வளர்க்கும் ஆலயம், கனவுகளை நனவாக்கும் தளம், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் அடித்தளம் என்பதை வலியுறுத்தினேன். இந்த வகுப்பறைகளில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் உயர்ந்த இலட்சியங்களுடன் கல்வியில் சிறந்து விளங்கி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பொறுப்புள்ள, பயனுள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பமாகும்.
மாணவர்களின் உற்சாகமான வரவேற்பு, பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்விற்கு மேலும் மெருகூட்டின. அவர்களின் திறமையும் தன்னம்பிக்கையும் நெடுந்தீவின் எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக இருப்பதை வெளிப்படுத்தின.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய பாடசாலை அதிபர், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் இத்திட்டம் வெற்றியடைய பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நெடுந்தீவின் கல்வி முன்னேற்றமும், தீவின் முழுமையான அபிவிருத்தியும் எமது பொறுப்பாகும். அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் இந்தப் பயணத்தில் என்றும் உங்களுடன் இணைந்து பயணிப்பேன்
EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency

4

கரூர் பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

July 30, 2026

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை

default (41)

ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் மாயமான பெண், காணாமல் போவதற்கு முன் தனது சகோதரியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்: குடும்பத்தினர் தகவல்

July 30, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) நடைபெற்ற ‘ஷம்பாலா’ இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்டாரியோவைச் சேர்ந்த பெண், தான் மாயமாவதற்கு

default (40)

கிச்சனர் (Kitchener) வீட்டில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம்: கொலை முயற்சி வழக்குப் பதிவு

July 30, 2026

கத்திக்குத்துச் சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து, கிச்சனர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர், 28 வயதான

3

பாலைவனமாக மாறி வறண்டு கிடக்கும் காவிரி ஆறு: திருச்சியில் அதிர்ச்சி தரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!

July 30, 2026

திருச்சி: நடப்பாண்டில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் திருச்சியில் காவிரி ஆறு முற்றிலும் நீரின்றி