இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றக் கொள்கைகளில் நிலவும் முறையற்ற தன்மைகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற சாதாரணதர தமிழ் மொழி மூல தவணைப் பரீட்சை வினாத்தாளானது, 2019 ஆம் ஆண்டு வடக்கு மாகாண வினாத்தாளின் முழுமையான நகலாகும். முதலாம் வினாத்தாளின் 24 ஆம் வினாவில் இருந்து, 2 மற்றும் 3 ஆம் வினாத்தாள்கள் முழுமையாக அவ்வாறே வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளருக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பொதுப்பணம் பெருமளவில் செலவிடப்படும் பரீட்சைகளில் அதிகாரிகள் இந்தளவு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது ஒட்டுமொத்த மோசடியாகும். எனவே, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, வடமேல் மாகாணத்தில் அச்சுக்கூடம் உரிய நேரத்தில் வினாத்தாள்களை வழங்காததால், 3 நாட்கள் நடைபெற்ற பரீட்சைகள் எஞ்சிய 4 நாட்களுக்குத் திடீரென நிறுத்தப்பட்டன. பரீட்சைக்குத் தயாராகியிருந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சைகளில் ஏற்படும் இவ்வாறான முறைகேடுகள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கிய விளக்கங்கள் எமக்குத் திருப்தியளிக்கவில்லை. அதிகாரிகள் வெறும் ஊடகச் சந்திப்புகளை நடத்துவதோடு நிறுத்தாமல், மறுபடி இத்தவறுகள் நடக்காத வண்ணம் தீர்வுகளை வழங்க வேண்டும்.

கல்வி அமைச்சு தற்போது 2027 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களுக்கு 8 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. ஆனால், 2026 ஆம் ஆண்டுக்குரிய இடமாற்றங்களின் கீழ், 9 வருடங்களுக்கும் மேலாகப் பிரதான பாடசாலைகளில் பணியாற்றி இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களில் 315 க்கும் அதிகமானோர் அதிபர்களின் சுய தேவைகளுக்காக இன்னும் விடுவிக்கப்படாமல் தங்கியுள்ளனர்.

இதனால் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கல்விச் செயலாளரின் உத்தரவை மீறி ஒரு குழுவினர் செல்லாமல் இருக்கிறார்கள் என்றால், கல்விச் செயலாளர் எடுக்கும் நடவடிக்கை என்ன? 2017 ஆம் ஆண்டில் 10 வருடங்களாக இருந்த சேவைக்காலம், பின்னர் 9 வருடங்களாகக் குறைக்கப்பட்டு, தற்போது 8 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இடமாற்ற உத்தரவு கிடைத்தும் செல்லாமல் இருப்பவர்கள் மீது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதைப் தெளிவுபடுத்த வேண்டும்.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, இடமாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்ட பல ஆசிரியர்களுக்குப் பதிலீட்டாளர்கள் இல்லாததால் அவர்களின் இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வெளி மாகாணங்களில் பல வருடங்களாகச் சேவை செய்யும் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆசிரியர்கள் மனநிறைவுடன் பணியாற்ற வேண்டுமாயின், அவர்களின் இடமாற்றங்கள் வெளிப்படையானதாகவும் முறையானதாகவும் அமைய வேண்டும். சில பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் உபரி நிலையைச் சீர்செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களுக்குப் போதிய ஆசிரியர்களை வழங்க அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்