ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!

வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து டிஃபெண்டர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 1,500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த இயற்கை அனர்த்தத்தில் நேர்ந்த இவர்களது மரணங்கள், விளையாட்டுத்துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

வெனிசுவெலாவின் இரண்டாம் நிலை கால்பந்து கழகம் மாரிடிமோ டி லா குவைரா அணியில் 38 வயதான லூகாஸ் ட்ரெஜோ விளையாடி வருகிறார்.

பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது அவர் தனது அணியுடன் கராகஸ் நகரில் தங்கியிருந்துள்ளார். ஆனால், பிளாயா கிராண்டே பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் பூமியதிர்ச்சியால் முற்றாக இடிந்து தரைமட்டமானது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ட்ரெஜோ உடனடியாகத் தனது சொந்த ஊருக்கு விரைந்ததுடன், தனது குடும்பத்தினரைக் கண்டுபிடித்துத் தருமாறு சமூக ஊடகங்களில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

“பிளாயா கிராண்டேவில் உள்ள எங்கள் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. என் குடும்பத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. தயவுசெய்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் அங்கு இருந்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது தந்தை, சகோதரன் மற்றும் தீயணைப்புப் படையினர் எனப் பலரும் இணைந்து இரவு பகலாக, 74 மணி நேரத் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு, பின்னர், ட்ரெஜோவின் மனைவி யானினா மரனெல்லா மற்றும் அவர்களது இரு குழந்தைகளான ஆரோன், அய்ன்ஹோவா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து ட்ரெஜோவின் நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “லூகாஸ் ட்ரெஜோவின் குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்பதை வெனிசுவெலா மற்றும் அர்ஜென்டினா மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு அனைவரும் உரிய மரியாதையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மாரிடிமோ கழகம் மற்றும் வெனிசுவெலாவின் முதன்மை லீக் கழகமான டெபோர்டிவோ லா குவைராவும் ட்ரெஜோவின் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் மட்டுமன்றி, மாரிடிமோ கழகத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் இந்த பூமியதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கழகத்தின் இளம் வளர்ந்து வரும் ஆட்டக்காரரான 14 வயது சிறுவன் விக்டர் பாலாசியோஸ் பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கழகத்தின் நிர்வாகப் பணியாளரான அட்ரியானா அரங்குரென் என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தற்போது வரை வெனிசுவெலா பூமியதிர்ச்சியில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேசக் குழுக்களின் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

f

சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிந்த இலங்கை அணி!

June 29, 2026

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்தித்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்

26-6a426e64d5a21

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!

June 29, 2026

வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச்

wat

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

June 29, 2026

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி

QI4MUFETOVFVFAPKRVUVGZTOZQ

ஒஸ்குட் அருகே இரு வாகனங்கள் மோதி விபத்து: 8 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

June 29, 2026

ஒஸ்குட் (Osgoode) பகுதிக்குத் தெற்கே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கொடூர வாகன விபத்தொன்றில் 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

AYJZKZA3FREUDNBLINDEXQCUUU

டெசேன்ஸ் அலைப்பாய்வில் சிக்கிய பான்டூன் படகு: 7 பேரை பத்திரமாக மீட்டது ஒட்டாவா தீயணைப்புப் படை

June 29, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெசேன்ஸ் அலைப்பாய்வு (Deschênes Rapids) பகுதியில் பான்டூன் படகு (Pontoon boat) ஒன்று சிக்கிக்கொண்டதை அடுத்து,

DUOTPKQW3GWJFXFJ2XXRRMRACU

கடை ஊழியருடன் மோதலின் போது அடையாள அட்டையைத் தவறவிட்ட பெண்: கொள்ளைக் குற்றச்சாட்டில் குயெல்ப் காவல்துறை கைது!

June 29, 2026

நகரத்தின் வடக்கு முனையில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேக நபர் தனது

EF6M3EBTCFE5THLOOMSFHSEBHI

இன்னிஸ்ஃபில் பகுதியில் வாகனத்திற்குள் நபர் ஒருவர் சடலமாக மீட்பு; காவல்துறை விசாரணை

June 29, 2026

இன்னிஸ்ஃபில் (Innisfil) பகுதியில் உள்ள வாகனமொன்றில் நபர் ஒருவர் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த

HAmsathvani

ராபா உலக சாதனைப் புத்தகத்தில் கிளிநொச்சிச் சிறுமி!

June 29, 2026

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற

photo-collage.png (2)

நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Ranjith

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

June 29, 2026

ழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்! யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர்

6

உளறல்நிதியின் மற்றொரு நாள், மற்றுமொரு உளறல் – தவெக விமர்சனம்

June 29, 2026

‘சென்னை: தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கருத்து,

5

‘குதிரை பேரம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்’ – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

June 29, 2026

‘சென்னை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக தேசிய