ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் இடிபாடுகளுக்குள் சடலங்களாக மீட்பு!

வெனிசுவெலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரிச்டர் 7.2 மற்றும் 7.5 அளவிலான மிகக் கொடூரமான இரட்டை பூமியதிர்ச்சிப் பேரழிவில், ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து டிஃபெண்டர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 1,500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ள இந்த இயற்கை அனர்த்தத்தில் நேர்ந்த இவர்களது மரணங்கள், விளையாட்டுத்துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

வெனிசுவெலாவின் இரண்டாம் நிலை கால்பந்து கழகம் மாரிடிமோ டி லா குவைரா அணியில் 38 வயதான லூகாஸ் ட்ரெஜோ விளையாடி வருகிறார்.

பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது அவர் தனது அணியுடன் கராகஸ் நகரில் தங்கியிருந்துள்ளார். ஆனால், பிளாயா கிராண்டே பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் பூமியதிர்ச்சியால் முற்றாக இடிந்து தரைமட்டமானது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ட்ரெஜோ உடனடியாகத் தனது சொந்த ஊருக்கு விரைந்ததுடன், தனது குடும்பத்தினரைக் கண்டுபிடித்துத் தருமாறு சமூக ஊடகங்களில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

“பிளாயா கிராண்டேவில் உள்ள எங்கள் கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது. என் குடும்பத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. தயவுசெய்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் அங்கு இருந்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது தந்தை, சகோதரன் மற்றும் தீயணைப்புப் படையினர் எனப் பலரும் இணைந்து இரவு பகலாக, 74 மணி நேரத் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு, பின்னர், ட்ரெஜோவின் மனைவி யானினா மரனெல்லா மற்றும் அவர்களது இரு குழந்தைகளான ஆரோன், அய்ன்ஹோவா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து ட்ரெஜோவின் நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “லூகாஸ் ட்ரெஜோவின் குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்பதை வெனிசுவெலா மற்றும் அர்ஜென்டினா மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு அனைவரும் உரிய மரியாதையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மாரிடிமோ கழகம் மற்றும் வெனிசுவெலாவின் முதன்மை லீக் கழகமான டெபோர்டிவோ லா குவைராவும் ட்ரெஜோவின் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் மட்டுமன்றி, மாரிடிமோ கழகத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் இந்த பூமியதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கழகத்தின் இளம் வளர்ந்து வரும் ஆட்டக்காரரான 14 வயது சிறுவன் விக்டர் பாலாசியோஸ் பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கழகத்தின் நிர்வாகப் பணியாளரான அட்ரியானா அரங்குரென் என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தற்போது வரை வெனிசுவெலா பூமியதிர்ச்சியில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சர்வதேசக் குழுக்களின் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது