தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலம் இலங்கையின் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஆவணம் என்பது தெளிவாகிறது.

ஆனால் அதனை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் பல சிக்கல்கள் மற்றும் இதுபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதின் ஊடாக இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கும், நிலைக்கொண்டிருக்கும் ஊடக கலாச்சாரத்திற்கும் ஏற்படக்கூடிய அழுத்தம் தொடர்பிலும் பல விடயங்களை கதிக்காக கலந்துரையாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

இதன் போது குறிப்பாக நிறுவனத்தின் தன்மை, அதாவது இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனமானது கட்டமைக்கப்பட்ட அரச நிறுவனமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வது மிக அவசியமாக உள்ளது. அது அவ்வாறாக இருந்தால், இலங்கை ஊடக சமூகம் எதிர்பார்க்கும் சுயாதீன நிறுவனமாக அமையாவிட்டால் இலங்கையின் சுதந்திர ஊடக கலாச்சாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.

அதேபோன்று நிறுவனத்தின் அலுவல்களை முகாமைத்துவ மற்றும் நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் இடைக்கால சபையானது அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளரின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிப்பதின் ஊடாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால் செய்தி ஆசிரியர் சங்கம், டிஜிட்டல் ஊடக ஒலிபரப்பாளர்களின் சங்கம் பத்திரிக்கை வெளியிட்டார்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் இணக்கபாடும் இதற்கு பெறுவது முக்கியமாக இருக்கும்.

மேலும் உத்தேச இலங்கை பட்டய ஊடகவியலாளர்களின் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடைக்கால சபையின் ஒரு வருடத்திற்குப் பின் உறுதிப்படுத்தப்படும் நிர்வாக குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில் ஏற்படக்கூடிய பாதக நிலைகள் மற்றும், முடிவுகள் எடுக்கும் போது பெரும்பான்மை வாக்குகள் ஐவருக்கு என்று முடிவு செய்து இருப்பதின் காரணமாக மூவரைக் கொண்ட குழுவிற்கு முடிவுகளை எடுக்க முடியாமல் போகக்கூடிய சூழல்களில் ஏற்படக்கூடிய பாதக நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகையால் நாட்டின் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைப்பு என்ற விதத்தில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்புகளிடத்திலும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இதனை முழுமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இலங்கையின் ஊடக மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அரசாங்கம் தற்போது தயாரித்துள்ள தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்து ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்லுமாறும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற விதத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

Chandrika-buddhism

மகா சங்கத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றன: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசர அறிக்கை!

June 25, 2026

இலங்கையில் பௌத்த மதகுருமார்கள் (மகா சங்கத்தினர்) சிலரின் தவறான ஒழுக்கக் கேடுகள் மற்றும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், பௌத்த மதத்தின் மீதும்

GSWT7ZKVVNFCNIZMQ22CLBU2GQ

ஒட்டாவா கத்திக்குத்துச் சம்பவம்: இரண்டு சிறுவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு! பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 25, 2026

ஒட்டாவா (CTV News Ottawa): கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இரவு மூனிஸ் பே பூங்காவில் (Mooney’s

crime

கனடா: பாரி நகரில் பயங்கரம்! மனைவியைச் சுட்டுக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை; பொலிஸார் அதிர்ச்சி விபரம் வெளியீடு

June 25, 2026

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாரி (Barrie) நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்ட

world cup canada

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விசா விண்ணப்பங்களை அதிரடியாக நிராகரித்தது கனடா- இலங்கை விண்ணப்பங்கள் 100 வீதம் நிராகரிப்பு

June 25, 2026

ஒட்டாவா (CTV News): கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பாரிய அளவில் நடைபெற்று வரும்

gary

கனடா: டொராண்டோவில் மிரட்டிப் பணம் பறிப்பு கும்பல்களுடன் தொடர்பு! வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக நாடுகடத்தல் உத்தரவு 

June 25, 2026

டொராண்டோ (CP24): கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) அரங்கேறி வரும் மிரட்டிப் பணம் பறிக்கும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய

har3

சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்

June 25, 2026

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப்

Fuel_1200px_22_10_17

உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றே உள்ளது: எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த முடியாது

June 25, 2026

எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு

socia

தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

June 25, 2026

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல்

images (12)

யாழில் 17 வயது இளம் தவில் வித்துவான் எடுத்த விபரீத முடிவு

June 25, 2026

யாழ்.கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கலைஞர் நேற்றையதினம் (24)

anura karunathi

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு

June 25, 2026

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும்

731147422_994403870139332_1768800714165529515_n

கியூபெக்: மின்னணு கண்காணிப்பு வளையத்தை உடைத்துவிட்டு நபர் தப்பியோட்டம்! கண்டால் நெருங்க வேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கை

June 25, 2026

கியூபெக் மாகாணத்தின் ‘சலாபெரி-டி-வல்லிபீல்ட்’ (Salaberry-de-Valleyfield) பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஸ்காட் மெக்கின்ஸ் (Scott McInnes) என்ற நபர், தனது

10

அரசு கல்லூரிகளில் 43% காலிப்பணியிடங்கள் – மாணவர் சேர்க்கை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை பாமக தலைவர்