இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலம் இலங்கையின் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அழுத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஆவணம் என்பது தெளிவாகிறது.
ஆனால் அதனை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பில் தோற்றுவித்திருக்கும் பல சிக்கல்கள் மற்றும் இதுபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதின் ஊடாக இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கும், நிலைக்கொண்டிருக்கும் ஊடக கலாச்சாரத்திற்கும் ஏற்படக்கூடிய அழுத்தம் தொடர்பிலும் பல விடயங்களை கதிக்காக கலந்துரையாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
இதன் போது குறிப்பாக நிறுவனத்தின் தன்மை, அதாவது இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனமானது கட்டமைக்கப்பட்ட அரச நிறுவனமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வது மிக அவசியமாக உள்ளது. அது அவ்வாறாக இருந்தால், இலங்கை ஊடக சமூகம் எதிர்பார்க்கும் சுயாதீன நிறுவனமாக அமையாவிட்டால் இலங்கையின் சுதந்திர ஊடக கலாச்சாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் எதிர்மறையாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
அதேபோன்று நிறுவனத்தின் அலுவல்களை முகாமைத்துவ மற்றும் நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் இடைக்கால சபையானது அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளரின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிப்பதின் ஊடாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால் செய்தி ஆசிரியர் சங்கம், டிஜிட்டல் ஊடக ஒலிபரப்பாளர்களின் சங்கம் பத்திரிக்கை வெளியிட்டார்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் இணக்கபாடும் இதற்கு பெறுவது முக்கியமாக இருக்கும்.
மேலும் உத்தேச இலங்கை பட்டய ஊடகவியலாளர்களின் நிறுவனம் தொடர்பிலான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடைக்கால சபையின் ஒரு வருடத்திற்குப் பின் உறுதிப்படுத்தப்படும் நிர்வாக குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில் ஏற்படக்கூடிய பாதக நிலைகள் மற்றும், முடிவுகள் எடுக்கும் போது பெரும்பான்மை வாக்குகள் ஐவருக்கு என்று முடிவு செய்து இருப்பதின் காரணமாக மூவரைக் கொண்ட குழுவிற்கு முடிவுகளை எடுக்க முடியாமல் போகக்கூடிய சூழல்களில் ஏற்படக்கூடிய பாதக நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆகையால் நாட்டின் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைப்பு என்ற விதத்தில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்புகளிடத்திலும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இதனை முழுமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இலங்கையின் ஊடக மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அரசாங்கம் தற்போது தயாரித்துள்ள தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்து ஏனைய நடவடிக்கைகளுக்கு செல்லுமாறும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற விதத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.