சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்று ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் மாநாட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…..

ஈழத் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கிய எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய மீளப் பெறப்பட முடியாத பூரண அதிகாரம் உடைய சமஸ்டி முறையிலான சுயாட்சி அலகொன்றை அரசியல் தீர்வாக பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து அரசியல் ரீதியாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும்..

எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்ளும் வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளோடு ஒன்றிணைந்து செயல்படவும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்..

எமது தாயக மண்ணில் அரச இயந்திரங்களினால் தொடர்ந்தும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்கவும் மேலதிகமான அபகரிப்புகளை தடுக்கவும் தொடர்ந்து உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வரையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள மாகாண சபை முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்..

எமது மக்களின் நலிந்து போன பொருளாதாரத்தை மீளக் கட்டியமைக்கும் முகமாக, பலதரப்பட்ட முதலீடுகளின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இனக்குடிப் பரம்பலை பேணக்கூடிய தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கான அனைத்து வேலை திட்டங்களையும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தவும்

எமது சமுதாயத்தின் உள்ள அனைத்து தரத்தினரதும் வாழ்க்கை தரத்தினையும் சமூக மேம்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும்..

அனைத்து வேலை திட்டங்களையும் நடைமுறைச் சாத்தியமான வகையில் முன்னெடுப்பதற்கு பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவுடனான நமது உறவை தொடர்ந்து பேணிப் பாதுகாக்கவும மற்றைய சர்வதேச நேச சக்திகளை ஒருங்கிணைக்கவும் உரிய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவும்.

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் எமது பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்பும் அனைத்து வேலை திட்டங்களையும் அயராத முன்னெடுக்கவும் இப் பிரகடனம் விதந்துரைக்கிறது

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட

725787214_3157095731150321_7205787586037390907_n

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி

June 19, 2026

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

June 19, 2026

யாழ்ப்பாண நகரின் பிரதான வீதியில் தமக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த பதாகையை (Banner) நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தாமே

726636978_3565023276978557_4923507748374105851_n

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி!

June 19, 2026

மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை

725611159_1536223961236185_8994205704252386807_n

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

June 19, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற

teldeniya-hospital

தெல்தெனியவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: மேலதிக விபரங்களை வெளியிட்டது காவல்துறை

June 19, 2026

தெல்தெனிய போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை மேலதிக விபரங்களை

Kalpitiya-clash

கற்பிட்டி பகுதியில் காவல்துறை – விமானப்படை இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் விமானப்படை தளபதி

June 19, 2026

கடந்த 2026 ஜூன் 17 அன்று கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் (Kalpitiya firing range) குண்டு செயலிழக்கச்

727288129_1634809484246428_3483563959969194747_n

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள நீதியமைச்சர் – உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்கின்றோம்” சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்று செம்மணியில் மாபெரும் போராட்டம்

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை

724831988_1316440127283157_7251771360397723744_n

அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை

June 19, 2026

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் படம் வைக்கப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

gaje

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

June 19, 2026

மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற

arrestt

கடத்தல் திட்டத்துடன் தொடர்புடைய மார்க்கம் மிரட்டிப் பணம் பறித்தல் விவகாரம்: மூவர் கைது

June 19, 2026

மார்க்கம் (Markham) பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மீது யோர்க்

726527369_981914391375336_6986041568040849432_n

எட்மண்டன் காவல்துறை $50,000 பெறுமதியான திருடப்பட்ட பொருட்களை மீட்டது: ‘ரீ-வின்னிங்’ விசாரணையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

June 19, 2026

இணையத்தில் விற்பனைக்காக ஏமாற்றுத்தனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த இழுவை வாகனம் (Trailer) குறித்த விசாரணையைத் தொடர்ந்து, எட்மண்டன் காவல்துறை சுமார் $50,000 மதிப்பிலான