புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் 42ஆவது கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது.

இத்தெரிவை அடுத்து கருத்துரைத்த பிரசாத் காரியவசம், தன்னை ஏகமனதாக தெரிவுசெய்தமைக்காக குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று சமகாலத்தில் மனித உரிமைகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் வளக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இக்குழுவின் எதிர்காலப் பணிகளில் ஒரு மூலோபாய அணுகுமுறைகயைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பதவிக்காலத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 2023 ஜுன் மாதம் முதல் இக்குழுவில் அங்கம்வகித்துவரும் பிரசாத் காரியவசம், தற்போதைய தெரிவின் பிரகாரம் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவார்.

ஏற்கனவே அவர் 2004 ஆம் ஆண்டு இக்குழு நிறுவப்பட்டபோது அதன் ஆரம்பத் தலைவராகப் பணியாற்றியதுடன், நான்கு தடவைகள் இக்குழுவில் உறுப்பினராக அங்கம்வகித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு என்பது 14 சுயாதீன நிபுணர்களைக்கொண்ட ஒரு கட்டமைப்பாகும். இது மிகமுக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் ஒன்றான ‘சகல புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை’ நாடுகளால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கிறது.

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக

ar

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

May 31, 2026

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு

kathai so

தமிழில் அறிமுகமாகும் டிஜிட்டல் தளம்- ‘கதை ஷார்ட்ஸ்’

May 31, 2026

ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

pikk

பல்லேகம தேரர் விவகாரம்; அஸ்டமஸ்தான குழுவின் முடிவு

May 31, 2026

மல்வத்த மகா விகாரையின் அஸ்டமஸ்தான குழு, வட மத்திய மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி சைத்யரமாதிகாரரின் பொறுப்பாளருமான வணக்கத்திற்குரிய எத்தலேவத்துனுவேவ

sl

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் ரத்து

May 31, 2026

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய

sea

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மாயம்

May 31, 2026

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை

death

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் மரணம்

May 31, 2026

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர்

prasa

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

May 31, 2026

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத்

acc

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!

May 31, 2026

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும்

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை