சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த கபிலவுக்கு பிணை நின்றவர்களிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை? – நீதவான் கேள்வி

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் பொலிஸார் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசாரிடம் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பிய நீதவான், இதுவரை அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களோ அல்லது குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்று வினவினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, இன்று மூன்றாவது நாளாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விபரம் வெளிவந்தது.

மரணமடைந்தவரின் தற்போதைய வீட்டிலும், அவர் வசித்து வந்த வீட்டிலும் உள்ள சிசிடிவி தரவுகள் சேமிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களின் டிவிஆர் இயந்திரங்கள் மற்றும் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மாத்திரைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அங்கு அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சமூகத்தில் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ள கபில சந்திரசேனவின் பிணையாளர்கள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பினார்:

“இந்த சாட்சிய விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?”

அதற்கு பதிலளித்த பொலிஸார், “சுவாமி… அவர்களிடம் இருந்து இதுவரை வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனது” என்று கூறினர்.

அப்போது நீதவான் கடுமையான தொனியில், “வாக்குமூலங்களை பதிவு செய்ய முடியாமல் போனதாகக் கூறி சாட்சியங்களை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையல்லவா முதலில் சாட்சியத்திற்கு அழைத்திருக்க வேண்டும். வாக்குமூலங்களை பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, “சுவாமி… அந்த இரண்டு பிணையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் இல்லையே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் எளிதானதே. என்னிடம் இருந்து உத்தரவைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்திருக்கலாம்” என்று கூறினார்.

விசாரணைகளுக்காக பொலிஸார் கோரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த நீதவான், மரண பரிசோதனை தொடர்பான சாட்சியங்களை அழைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி, முதலாவதாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் செவிலியரான கோசல ரத்னஜீவ சாட்சியமளித்தார்:

“சம்பவம் நடந்தன்று காலை 7.45 மணியளவில் முதல் தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் நோயாளர் காவு வண்டி மூலம் அந்த வீட்டிற்குச் சென்றோம். பின்னர் அந்த வீட்டில் இருந்த ஒரு சட்டத்தரணி எங்களை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் மீது ஒரு ஆடைப் பை வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் தரையில் படுத்திருப்பது போல் கிடந்தார். கழுத்தில் ஒரு துணிப் பட்டி கட்டப்பட்டிருந்தது. முகம் ஒரு நாற்காலியின் மேல் இருந்தது. வைத்தியர் அந்த நபரைப் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். மரணமடைந்தவர் கபில சந்திரசேன என்பதை அறிந்துகொண்டேன். வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நான் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தேன்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரிந்த ராஜேந்திர குமார் சிவகுமார் சாட்சியமளித்தார்:

“மே 07 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் கபில ஐயா எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் இரவு உணவு உட்கொள்ளவில்லை. இரவில் கபில அவர்கள் அரவிந்த ஐயாவுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நள்ளிரவு 12.10 மணியளவில் நான் தூங்கச் செல்லத் தயாரானேன். கடைசியாக நான் தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். அப்போது நேரம் நள்ளிரவு 12.00 மணி முதல் 12.05 மணிக்கு இடையில் இருக்கும். நான் நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கச் சென்றேன். நள்ளிரவு 1.30 மணியளவில் கழிவறைக்குச் செல்ல நான் விழித்தேன். சமையலறை பகுதியில் விளக்குகள் எரியக் கண்டேன். நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த நேரத்தில் கபில அவர்கள் கையில் ஒரு வெள்ளை நிறப் போத்தலை வைத்துக்கொண்டு ஃபில்டருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். நான் சாரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். தண்ணீர் எடுக்க வந்ததாகக் கூறினார். நான் அறையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன். பின்னர் அவர் மேலே சென்றார், நானும் தூங்கச் சென்றேன்” என்று சாட்சி கூறினார்.

பின்னர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளரான கிரிஷாந்த கமலசிறி சாட்சியமளித்தார்:

“அரவிந்த டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது வீட்டில் ஐந்து கெமராக்கள் பொருத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டளவில்தான் அவை பொருத்தப்பட்டன. கெமராக்களில் தரவுகள் சுமார் ஒரு மாதம் சேமிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஓராண்டிற்குப் பிறகு அழைப்பு விடுத்து அலாரம் அடிப்பதாகப் பார்க்கச் சொன்னார்கள். பரிசோதித்தபோது அதன் ‘ஹார்ட் டிஸ்க்’ சேதமடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது. இந்த கெமராக்களில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்று என்னால் கூற முடியாது. நான் அதனைப் பரிசோதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு