விக்டோரியாவில் உள்ள பரோல் (Parole) சமூக குடியிருப்பு வசதி மையத்திலிருந்து கடந்த மே 19 அதிகாலை அனுமதியின்றி வெளியேறி, சட்டவிரோதமாகத் தலைமறைவாகியுள்ள 35 வயதுடைய ஜோயல் ரீட் (Joel Reed) என்பவரைக் கண்டுபிடிப்பதற்கு விக்டோரியா காவல் துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
ரீட்டைக் கைது செய்வதற்காக கனடா தழுவிய அளவிலான (Canada-wide warrant) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பயமுறுத்திப் பணம் பறித்தல் (Extortion), வீட்டை உடைத்துத் திருடுதல், $5,000க்குக் குறைவான திருட்டு, தடை உத்தரவை மீறி ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கியை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ரீட் தற்போது மத்திய சிறைத்தண்டனையை (Federal sentence) அனுபவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரீட், சாம்பல் நிற நான்கு கதவுகள் கொண்ட 2005 ஆம் ஆண்டு தயாரிப்பான ‘ஆடி ஏ8’ (Audi A8) ரக காருடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதாகப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரீட்டைக் கண்டால் பொதுமக்கள் யாரும் அவரை நெருங்க வேண்டாம் என எச்சரித்துள்ள காவல்துறை, அவர் இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 911 என்ற அவசர இலக்கிற்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.